Type Here to Get Search Results !

DOWNLOAD MAY 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF



TNPSC SHOUTERS  - MAY 2019
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st MAY 2019
2.
2nd MAY 2019
3.
3rd MAY 2019
4.
4th MAY 2019
5.
5th MAY 2019
6.
6th MAY 2019
7.
7th MAY 2019
8.
8th MAY 2019
9.
9th MAY 2019
10.
10th MAY 2019
11.
11th MAY 2019
12.
12th MAY 2019
13.
13th MAY 2019
14.
14th MAY 2019
15.
15th MAY 2019
16.
16th MAY 2019
17.
17th MAY 2019
18.
18th MAY 2019
19.
19th MAY 2019
20.
20th MAY 2019
21.
21st MAY 2019
22.
22nd MAY 2019
23.
23rd MAY 2019
24.
24th MAY 2019
25.
25th MAY 2019
26.
26th MAY 2019
27.
27th MAY 2019
28.
28th MAY 2019
29.
29th MAY 2019
30.
30th MAY 2019
31.
31st MAY 2019




ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.13 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை
  • நிகழாண்டு மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1. 06 லட்சம் கோடியாக இருந்தது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து கிடைத்த அதிகபட்ச வருவாயாக இது இருந்தது. 
  • இந்நிலையில், 2019 - 2020ஆம் நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததையடுத்து, இந்த மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1. 13 கோடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 
  • கடந்த நிதியாண்டின் மாத சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ. 98, 114 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரல் மாதம் 16.05 சதவீதம் அதிகமாக வரி வசூல் ஆகியுள்ளது.
  • ஒட்டுமொத்தமாக ஏப்ரல் மாதத்தில் ரூ. 1, 13, 865 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. அதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 21,163 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 28, 801 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 54,733 கோடியாகவும், தீர்வை ரூ. 9,168 கோடியாகவும் உள்ளன. ஜிஎஸ்டிஆர்3பி படிவத்தில் விற்பனை கணக்கு விபரங்களை சமர்ப்பித்தோரின் மொத்த எண்ணிக்கை 72.13 லட்சமாக உள்ளது. 
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
  • தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களை ஆசிரியர் பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  • தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நிபந்தனை விதியின்படி தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாத பணியாளர்களுக்கு கால அவகாசம் வழங்க உயர் அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. அதிகாரிகள் மூலம் வழங்கப்படும் அந்த கால அவகாசத்துக்குள் அந்தப் பணியாளர் தேர்ச்சிப் பெறவில்லை என்றால், அவரை பணி நீக்கம் செய்வதைத் தவிர வேறு வழி கிடையாது. 
  • மனுதாரர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
கேல் ரத்னா விருதுக்கு ஸ்ரீஜேஷ் பெயர் பரிந்துரை
  • இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும் நடுகள வீரர் சிங்கலென்சனா சிங் கங்குஜம், முன்கள வீரர் ஆகாஷ்தீப் சிங், மகளிர் அணியின் டிபன்டரான தீபிகா ஆகியோரை பெர்களை அர்ஜுனா விருதுக்கும் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
  • மேலும் ஆர்.பி.சிங், சந்தீப் கவுர் ஆகியோரது பெயர்கள் தயான் சந்த் விருதுக்கும் பல்ஜித் சிங், பி.எஸ்.சவுகான், ரமேஷ் பதானியா ஆகியோரது பெயர்கள் துரோணச்சார்யா விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை
  • தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. 
  • இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய தடகள சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.



உக்ரைன் மக்களுக்கு ரஷிய குடியுரிமை: சர்ச்சைக்குரிய சட்டத்தில் புதின் கையெழுத்து
  • உக்ரைனைச் சேர்ந்தவர்களுக்கு விரைவில் ரஷிய குடியுரிமை அளிக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தில் அதிபர் விளாதிமீர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
  • உக்ரைன் மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக புதின் கையெழுத்திட்ட புதிய சட்டம், அரசாணையில் புதன்கிழமை வெளிடப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, உக்ரைனைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரும் ரஷியக் குடியுமை பெறுவதற்கு சுலப வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கப்படுகிறது.
மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி ஐ.நா. அதிரடி அறிவிப்பு
  • புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன.
  • மசூத் அசார் விவகாரத்தில் 4 வது முறையாக இந்நடவடிக்கையை சீனா மேற்கொண்டது.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அசாருக்கு தடை விதிக்க பொருந்தும் என அமெரிக்கா கூறியது. பிராந்திய அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது எனவும் எச்சரித்தது.
இந்திய விமானப்படை துணை தளபதியானார் ராகேஷ்
  • ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா இந்திய விமானப்படையின் துணை தளபதியாக பதவியேற்றுக் கொண்டார். இந்திய விமானப்படைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் ரபேல் போர் விமான இறுதிக்கட்ட பேரத்தில் முக்கிய பங்காற்றிய ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா இந்திய விமானப்படையின் துணை தளபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
  • இந்நிலையில், டெல்லியில் உள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் துணை தளபதியாக அவர் பதவியேற்றுக் கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel