Type Here to Get Search Results !

26th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

சிக்கிம் முதல்வராக பதவியேற்கும் பிரேம்சிங் தமாங்
  • சிக்கிம் மாநில முதல்வராக சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா தலைவர் பிரேம்சிங் தமாங் இன்று பதவியேற்கின்றார். 17-வது மக்களவைக்கான தேர்தலுடன், 32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைப்பெற்றது. 
  • இத்தேர்தலில் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சிக்கு சிக்கிம் கிராந்திகர் மோர்ச்சா கட்சி முடிவு கட்டியுள்ளது. 
  • சிக்கிம் தேர்தலை பொறுத்தவரையில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சிக்கும், சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அந்த மாநிலத்தில் 1994-ஆம் ஆண்டில் இருந்து 5 முறை முதல்வராக இருந்த பவன்குமார் சம்லிங்க் மீண்டும் களம் கண்டார்.



பாஜ பாராளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு
  • பாராளுமன்ற தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். 
  • பாராளுமன்ற தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். 
  • இந்நிலையில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற பாஜ தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்ற கட்சி தலைவராக மோடியின் பெயரை அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் முன்மொழிந்தனர்.
வாலன்சியா சாம்பியன்
  • கோபா டெல் ரே கால்பந்து தொடரில் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது பார்சிலோனா. பைனலில் அசத்திய வாலன்சியா 2-1 என வென்றது.ஸ்பெயினில் கிளப் அணிகளுக்கு இடையே கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடந்தது. 
அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் மைஸ்னம் மீரபா சாம்பியன்
  • அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் மணிப்பூர் வீரர் மைஸ்னம் மீரபா, டெல்லி வீரர் ஆகாஷ் யாதவை சந்தித்தார். 
  • இதில் மைஸ்னம் 21-9, 12-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த போது காயம் காரணமாக ஆகாஷ் விலகினார். இதனால் மைஸ்னம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் சமியா இமாத் சாம்பியன்
  • அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. 
  • கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் சமியா இமாத் பரூகி (தெலுங்கானா) 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் டெல்லி வீராங்கனை ஆஷி ரவாத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 



ஆசிய பாட்மிண்டன் கவுன்சில் துணைத் தலைவராக ஹிமந்த விஸ்வ சர்மா தேர்வு
  • ஆசிய பாட்மிண்டன் கவுன்சில் துணைத் தலைவராக இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவர் ஹிமந்த விஸ்வ சர்மா (50) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • மொத்தமுள்ள 40 வாக்குகளில் 35 வாக்குகளை பெற்று அவர் துணைத் தலைவரானார். 
  • அஸ்ஸாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான ஹிமந்த விஸ்வ சர்மா, கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை: மீண்டும் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா
  • ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா. 
  • கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் உலக சாதனையுடன் தங்கம் வென்று சாதனை படைத்தார் அபூர்வி. தற்போது மீண்டும் தங்கம் வென்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த அபூர்வி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 251 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். 
  • சீன வீராங்கனை வாங் லுயாவ் 250.8 புள்ளிகள் பெற்றி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு சீன வீராங்கனை ஜூ ஹாங் 229.4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். 
  • இதே பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், 0.1 புள்ளி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்து 4ஆவது இடத்தையும், அஞ்சும் முட்கில் 11ஆவது இடத்தையும் பிடித்தனர். சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் அபூர்வி வென்ற நான்காவது பதக்கம் இதுவாகும்.
அகில இந்திய ஹாக்கி: பெங்களூரு அணி சாம்பியன்
  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
ஸ்குவாஷ்: மன்யோன்கர் சாம்பியன்
  • சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர் மகேஷ் மன்யோன்கர் கோப்பை வென்றார்.சுவிட்சர்லாந்தின் கிரின்ஸ் பகுதியில் ஆண்களுக்கான சர்வதேச ஓபன் ஸ்குவாஷ் நடந்தது. 
  • இதன் பைனலில் இந்தியாவின் மகேஷ் மன்கோயன்கர், ஸ்பெயினின் பெர்னாட்டை எதிர் கொண்டார். முதல் செட்டை 11-9 என கைப்பற்றிய மகேஷ், அடுத்த செட்டை 3-11 என பறிகொடுத்தார். 
  • மீண்டும் எழுச்சி பெற்ற இவர் அடுத்த இரண்டு செட்டையும் 11-5, 11-5 என வசப்படுத்தினார். முடிவில், மகேஷ் 3-1 (11-9, 3-11, 11-5, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதன் மூலம், இத்தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கனவே, 2016ல் கோப்பை கைப்பற்றி இருந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel