Type Here to Get Search Results !

DOWNLOAD OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF



TNPSC SHOUTERS  - OCTOBER 2019
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st OCTOBER 2019
2.
2nd OCTOBER 2019
3.
3rd OCTOBER 2019
4.
4th OCTOBER 2019
5.
5th OCTOBER 2019
6.
6th OCTOBER 2019
7.
7th OCTOBER 2019
8.
8th OCTOBER 2019
9.
9th OCTOBER 2019
10.
10th OCTOBER 2019
11.
11th OCTOBER 2019
12.
12th OCTOBER 2019
13.
13th OCTOBER 2019
14.
14th OCTOBER 2019
15.
15th OCTOBER 2019
16.
16th OCTOBER 2019
17.
17th OCTOBER 2019
18.
18th OCTOBER 2019
19.
19th OCTOBER 2019
20.
20th OCTOBER 2019
21.
21st OCTOBER 2019
22.
22nd OCTOBER 2019
23.
23rd OCTOBER 2019
24.
24th OCTOBER 2019
25.
25th OCTOBER 2019
26.
26th OCTOBER 2019
27.
27th OCTOBER 2019
28.
28th OCTOBER 2019
29.
29th OCTOBER 2019
30.
30th OCTOBER 2019
31.
31st OCTOBER 2019

DOWNLOAD OCTOBER 2019 CURRENT AFFAIRS 
TNPSC SHOUTERS TAMIL PDF

6 லட்சம் டன் யூரியாதமிழகத்திற்கு ஒதுக்கீடு
  • வேளாண் துறையின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கு, 6 லட்சம் டன் யூரியா உரத்தை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் சாகுபடிக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உர வகைகளை, மத்திய அரசு மானியத்தில் வழங்கி வருகிறது
  • இவை, கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில், விவசாயிகளுக்கு விற்கப்படுகின்றன. ஏப்ரல் முதல், செப்., வரை, 6.46 லட்சம் டன் உர வகைகள் விற்கப்பட்டுள்ளன.
  • நடப்பு அக்டோபர் முதல், 2020 மார்ச் வரை, விவசாயிகள் பலவகை பயிர்களை சாகுபடி செய்வர். இதற்கு, 6 லட்சம் டன் யூரியா தேவைப்படும் என, வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது
  • சமீபத்தில், டில்லியில் தேசிய அளவிலான, ராபி பருவ இடுபொருள் மாநாடு நடந்தது. இதில், தமிழகத்திற்கு, 6 லட்சம் டன் யூரியா வழங்க வேண்டும் என, வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி மற்றும் இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது
  • இந்த கோரிக்கையை ஏற்று, 6 லட்சம் டன்கள் யூரியாவை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தற்போது, கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில், 1.74 லட்சம் டன் யூரியா இருப்பில் உள்ளது.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
  • சென்னை கொடுங்கையூரில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
  • கழிவுநீரை சுத்திகரித்து, குடிநீராக மாற்றும் திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது. கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய நான்கு இடங்களில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது
  • கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படவுள்ளது
  • இங்கு உற்பத்தியாகும் தண்ணீர் மணலில் உள்ள பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப ஏதுவாக குழாய்கள் பதிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன
ஜிஎஸ்டி வசூல்: செப்டம்பர் மாதத்தில் ரூ. 91,916 கோடியாக சரிவு
  • நாட்டில் பொருளாதார சுணக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், செப்டம்பர் மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 91,916 கோடியாக சரிந்துள்ளது.
  • இதில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ. 16,630 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ. 22,598 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ. 45,069 கோடியும் வசூலாகியிருக்கிறது. அதே நேரத்தில் 'செஸ்' எனப்படும் கூடுதல் வரி ரூ. 7,620 கோடியாக இருந்தது.
மாலத்தீவு படையினருக்கு இந்திய கடலோரக் காவல் படை பயிற்சி
  • மாலத்தீவு நாட்டின் தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்திய கடலோரக் காவல் படையினா் அளிக்கும் பயிற்சி முகாம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
  • இப்பயிற்சி முகாம் தொடா்ந்து பன்னிரண்டு நாள்கள் நடைபெற உள்ளது
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள நாடு மாலத்தீவு. மேலும் இப்பிராந்தியத்தில் கடல்சாா் பாதுகாப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
  • விரிவடைந்து வரும் கடல்சாா் பொருளாதார முக்கியத்துவத்தின் அடிப்படையில் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்திய கடலோரக் காவல் படை பயிற்சி அளிக்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
  • மேலும் இந்தியா சாா்பில் அதிநவீன இடைமறிக்கும் படகு ஒன்று மாலத்தீவு நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படகில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன உபகரணங்களை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் தேடுதல் , நுண்ணறியும் திறன், பாதுகாப்பு செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடங்கிய முகாம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
  • எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
  • கைது செய்ய 2 நீதிபதிகள் அமர்வு விதித்த தடையை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதி நீக்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஐஎம்எப்.,பின் இந்திய செயல் இயக்குனராக சுர்ஜித்பல்லா நியமனம்
  • ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின், இந்திய செயல் இயக்குனர் பதவியில், பிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்
  • இவரது நியமனத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது
  • இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் பல்லா இடம்பெற்றிருந்தார். கடந்த 2019 டிச.,ல் தனது பதவியை பல்லா ராஜினாமா செய்தார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்டது பாலஸ்தீன அரசு
  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக பாலஸ்தீன அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிலும் காந்தியின் 150-வது பிறந்தநாளை இந்திய தூதரகத்துடன் இணைந்து ரஷ்ய நாடாளுமன்றம் கொண்டாடுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel