இந்தியாவிலேயே முதல்முறையாக கிண்டி பூங்காவில் Augmented Reality தியேட்டர்
- Augmented reality என்கிற புனை மெய்யாக்கத் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தில் திரையரங்கம் அமையப்போகிறது.
- ``இது இந்தியாவிலேயே முதன்முறையாக கிண்டி சிறுவர் பூங்காவில் அமையப்போகும் திரையரங்கம். கொல்கத்தா மற்றும் மும்பையில் இந்தத் தொழில்நுட்பத்துக்கான சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
- Zoo Authority of TamilNadu (ZAT) நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இதில், ஒவ்வொரு காட்சியும் 13 நிமிடங்கள் நடைபெறும். ஒருநாளைக்கு 6 காட்சிகள் நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளோம்.டைனோசர்
மாணவா்களுக்கான காய்கறித் தோட்டம்: அனைத்துப் பள்ளிகளிலும் அமைக்க மத்திய அரசு உத்தரவு
- அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த, மாணவா்களுக்கான காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஊட்டச்சத்து மிகுந்த மாணவா்களுக்கான காய்கறித் தோட்டங்களை உருவாக்க வேண்டும். தோட்டத்தை உருவாக்கத் தேவையான விதைகள், மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் முறையான பயிற்சி ஆகியவை வழங்கப்படும்.
- இதற்கு, 'கிரிஷி விக்யான் கேந்திரா' (அறிவியல் தோட்ட மையம்), தோட்டக்கலைத் துறை, விவசாயத் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து மையம், மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் வனத்துறையின் உதவியையும் வழிகாட்டுதலையும் பெற்றுக்கொள்ளலாம்.
- தோட்டத்துக்கான எல்லைச் சுவரை அமைப்பது, நிலத்தைச் சமப்படுத்துவது ஆகியவற்றுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள்கள் வேலை) தொழிலாளா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பள்ளிகளில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தவும், நகரமயமாகி வரும் சூழலில் நமக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே உருவாக்கிக் கொள்ளும் திறனை வளா்த்துக் கொள்ளவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- பெருகிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும் காய்கறித் தோட்டத்துக்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DNA ஒழுங்குமுறை மசோதா, பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரை
- குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்கள், சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகள் உள்ளிட்ட சில வகை நபர்களின் அடையாளத்தை நிறுவுவதற்கான deoxyribonucleic acid (டி.என்.ஏ) தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முற்படும் மசோதா ஜூலை மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- இந்நிலையில் இந்த மசோதாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு பரிந்துரைத்துள்ளார்.
- மாநிலங்களவை தலைவர், சபாநாயகருடன் கலந்தாலோசித்து, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட DNA தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் விண்ணப்பம்) ஒழுங்குமுறை மசோதா, 2019-ஐ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நிலைக்குழுக்கு பரிந்துரை செய்துள்ளதாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர்களுக்கு குண்டு துறைக்காத ஜாக்கெட்: ஒப்பந்தப்படி ராணுவத்திடம் வழங்கிய SMPP நிறுவனம்
- ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்களை, போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி SMPP நிறுவனம் இந்திய ராணுவத்திடம் வழங்கியுள்ளது.
- காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் படையினருக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் ராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளது.
- 2021ம் ஆண்டுக்குள் 1.8 லட்சம் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்பதே ஒப்பந்தம்.
- தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் முக பாதுகாப்பு என இதன் அனைத்து பாகங்களும் ஏ.கே 47 ரக துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட ஹார்ட்கோர் எஃகு வெடிமருத்துகளை தாங்கும் சக்தி கொண்டதாகும்.
என்எஸ்ஜி தலைமை இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி அனுப்குமார் நியமனம்
- கடந்த 1985-ஆம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அனுப் குமாரின் நியமனத்துக்கு, பிரதமா் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இவா், அடுத்த ஆண்டு செப்டம்பா் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, என்எஸ்ஜி தலைமை இயக்குநராக பதவி வகிப்பாா் என்று மத்திய பணியாளா், பயிற்சித் துறை வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பயங்கரவாதிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் ஈடுபடவும், விமான கடத்தல் சம்பவங்களைத் தடுக்கவும் கடந்த 1984-இல் என்எஸ்ஜி உருவாக்கப்பட்டது. மிக முக்கியப் பிரமுகா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் இப்படையினா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
சைனிக் பள்ளிகளில் பெண் மாணவர்களை அனுமதிக்க ராஜ்நாத் சிங் ஒப்புதல்
- 2021-22 கல்வி அமர்வில் இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ கல்விக்கான சைனிக் பள்ளிகளில் இனி மாணவிகளையும் சேர்த்துக் கொள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
- மேலும், அந்த கல்வி நிறுவனங்களில் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் போதுமான பெண் ஊழியர்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிங் அறிவுறுத்தினார்.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிசோரத்தில் உள்ள சைனிக் பள்ளி சிங்சிப்பில் சிறுமிகளை அனுமதிக்க பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கிய பைலட் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியை வீழ்த்தி ப்ரோ கபடி சாம்பியனான பெங்கால்
- ஜூலை மாதம் 20 -ம் தேதி தொடங்கிய `ப்ரோ கபடி லீக் சீசன் 7' தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மொத்தம் 12 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், உ.பி யோத்தா, யு மும்பா, ஹரியானா ஸ்டீலெர்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 6 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
- இதனை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி அணி பெங்களுரு அணியையும், பெங்கால் அணி மும்பை அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல்லி அணியும் பெங்கால் அணியும் மோதியது.
- இறுதியாக பெங்கால் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.