அசுத்தமான பால் விற்பனையாகும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம்
- பாக்கெட்டுகளில் விற்கப்படும் பால் பாக்கெட்டுகள் சுகாதாரமற்றவையாக இருப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- நாடெங்கிலும் உள்ள தனியார் பால் பாக்கெடுகள் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் மூல பாலின் அளவை விட பூச்சிக்கொல்லிகளும், அப்லாடாக்சின் என்ற அசுத்தமும் அதிகளவில் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
- சுமார் 3825 பால் மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில் அதில் 47 சதவீதம் மட்டுமே ஆரோக்கியமான பால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- மேலும் அசுத்தமான பால் விற்பனையாகும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் இடத்தில் டெல்லியும், மூன்றாம் இடத்தில் கேரளாவும் உள்ளன.
அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம்
- அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதிகாரி பிரதீக் ஹஜேலாவை அயல்துறைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்
- உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். பொதுவாக தலைமை நீதிபதியாக இருப்பவர்கள் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்து கடிதம் அனுப்புவது மரபு.
கர்நாடக நாட்டுப்புறக்கலை அகாடமிக்குத் தலைவரான திருநங்கை
- மஞ்சம்மா என்னும் 62 வயது நாட்டியக் கலைஞரை மாநிலத்தின் நாட்டுப்புறக்கலை மற்றும் கலைஞர்கள் நல்வாழ்வு அகாடமியின் தலைவராக அறிவித்துள்ளது கர்நாடக மாநில அரசு. இவர் ஒரு திருநங்கை.
- திருநங்கை ஒருவர் அகாடமிக்குத் தலைவராகப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை. கர்நாடகாவின் 'ஜோகட்டி' நாட்டியக் கலையில் தேர்ந்த நிபுணர் மஞ்சம்மா.
சரித்திர சாதனை படைத்தது ரிலையன்ஸ்
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
விண்வெளியில் பெண்கள் நடைப்பயணம் 'நாசா' விஞ்ஞானிகள் சாதனை
- அமெரிக்க விண்வெளி வீராங்கனையரான கிறிஸ்டினா கோச் ஜெசிகா மேர் ஆகியோர் விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டனர்.
- இதன்மூலம் முதல் முறையாக விண்வெளியில் பெண்களை மட்டுமே நடைபயணம் மேற்கொள்ள வைத்து 'நாசா' விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.