Type Here to Get Search Results !

TNPSC GK TOPIC SEPTEMBER 2020-GROUP 1 GROUP 2-TAMIL PDF

  



நடப்பு விவகார -பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது.

NEW  AUGUST 2020 PDF-TNPSC SHOUTERS  :
NO OF PAGES :134
FILE SIZE :3.84 MB


NEW RELEASED JUNE 2020 PDF-TNPSC SHOUTERS PDF
NEW RELEASED MAY 2020 PDF-TNPSC SHOUTERS PDF

TNPSC GK TOPIC SEPTEMBER 2020-GROUP 1 GROUP 2

  • செப்டம்பர் 1 ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது . உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்பது ஆஸ்திரிலியாவைச் சேர்த்த புகைப்படை கலைஞர் ரிச்சர்ட் சிம்கின் என்பவரால் 2014 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு முறையாகும். கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர், ஒரு கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட ஒரு தனிப்பட்ட அனுபவமாக அமையும் என்று கருதுபவர். அதனால்தான் அதனை கொண்டாடும் விதமாக இந்த தினத்தை அனுசரிக்கிறார். இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.
  • துர்காபூரில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-சி.எம்.ஆர்.ஐ குடியிருப்பு காலனியில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய சூரிய மரத்தை சி.எஸ்.ஐ.ஆர்-சி.எம்.ஆர்.ஐ உருவாக்கியுள்ளது
  • இந்திய அரசியலில் மூத்த தலைவராக இருந்த பிரணாப் முகா்ஜி, ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்தின் மிராட்டி கிராமத்தில் கமடா கின்காா் முகா்ஜி-ராஜலக்ஷ்மி முகா்ஜி ஆகியோருக்கு மகனாக 1935 டிசம்பா் 11-ஆம் தேதி பிறந்தாா். அவரது தந்தை இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாா்.அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற பிரணாப் முகா்ஜி, முதலில் தபால்-தந்தி அலுவலகத்தில் எழுத்தராகவும், பின்னா் கல்லூரிப் பேராசிரியராகவும், அதைத் தொடா்ந்து பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளாா். அதன் பிறகே அரசியலில் தடம் பதித்தாா்.
  • முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஒரு வாகனத்தை பெண் ஓட்டுநர் வீரலட்சுமி இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து, தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
  • சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு இந்த ஆண்டுக்கான உலக நாடுகளின் சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு தரவரிசையின் டாப் 50 நாடுகள் பட்டியலில் இந்தியா 48வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது கண்டுபிடிப்புத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
  • மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், 'மிஷன் கர்மயோகி' என்ற திட்டத்தை அமல்படுத்த, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம், மனிதவள மேம்பாட்டில், முக்கிய சீர்த்திருத்தமாக இருக்கும்.
  • வங்க கடலில் இந்திய ரஷ்ய கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்தியாவும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்குகின்றன. தொழில், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுகின்றன. 
  • கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்திய கடற்படையும், ரஷ்ய கடற்படையும் இணைந்து ஆண்டு தோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு முன் கடைசியாக 2018-ம் ஆண்டு விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சி நடத்தின.
  • பஞ்சாபில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும், மக்களை பங்குதாரர்களாக மாற்றுவதற்கும், மாநில வனத்துறை ‘ஐ ரக்வாலி’ செயலியை அறிமுகப்படுத்தியது. 
  • செப்டம்பர் 5, 2020 அன்று, மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர், மாநிலங்களின் வணிக சீர்திருத்த செயல் திட்ட தரவரிசையின் நான்காவது பதிப்பை அறிமுகப்படுத்தினார்.
  • செப்டம்பர் 4, 2020 அன்று, துணைத் தலைவர் வெங்கையா நாயுடு “இந்தியாவில் இளம் குழந்தைகளின் நிலை” அறிக்கையை வெளியிட்டார்.  மொபைல் க்ரீச்ஸால் (Mobile Creches, a Policy Advocacy Organization) இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கை நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை அளவிடுகிறது.
  • ரூ,1000 கோடி மதிப்புடன் சுய வேலைவாய்ப்பு திட்டத்தை மாநில அரசு துவங்கி உள்ளது. சுவாமி விவேகானந்தர் அசாம் இளைஞர் அதிகாரமளித்தல் (Swami Vivekananda Assam Youth Empowerment (SVAYEM)) என அழைக்கப்படும் இந்த திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு வணிக முயற்சிகளைத் தொடங்க தலா ரூ.50,000 வரை பணமாக வழங்கும்.
  • தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய கள ஆய்வில், கேரள மாநிலத்தில் 96.2 சதவீதம் பேர் கல்வியறவு பெற்று முதலிடத்தில் உள்ளனர். 66.4 சதவீதத்துடன் ஆந்திரா மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது எனத் தெரியவந்துள்ளது.
  • மீனவர்கள், பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சந்தைப்படுத்தல் தகவல்களை அறிந்துகொள்ள இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். 
  • இ-கோபாலா என்பது விரிவான கலப்பின உற்பத்தி சந்தைப்படுத்தலுக்கு உதவுவதாகவும், விவசாயிகளின் நேரடி பயன்பாட்டுக்கான முனையமாகவும் இருக்கும். 
  • முதல் உலக சூரிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கம், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் குறித்து கவனத்தை ஈர்ப்பதாகும்.
  • பிரதம மந்திரி அலுவலகத்திற்கான அமைச்சர் இது ஜம்மு-காஷ்மீரில் யூனியன் பிரதேசமாக (UT) ஆன பிறகு முதல் பெரிய வெளிநாட்டு முதலீடு ஆகும்.
  • ஜம்மு-காஷ்மீர் மற்றும் கனேடிய ஒத்துழைப்பில் முதல் கஞ்சா மருந்து அமைக்கப்படும் என்று ஜிதேந்திர சிங் கூறினார்.
  • “தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020” ஐ முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-9-2020 அன்று வெளியிட்டார்.
  • கே.வி.காமத் குழுவின் (KV Kamath Committee) பரிந்துரையின் படி, கட்டுமானம், எஃகு உற்பத்தி, சாலைகள் அமைப்பு, மனை வணிகம், மொத்த வியாபாரம், ஜவுளி, ரசாயனம், நுகா்வுப் பொருள்கள், எஃகு அல்லாத உலோகங்கள், மருந்து உற்பத்தி, சரக்கு போக்குவரத்து, ஆபரண கற்கள் மற்றும் நகைகள், சிமெண்ட், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா, சுரங்கம், பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு, வாகன தயாரிப்பு, வாகன உதிரிபாகங்கள், வாகன விநியோகஸ்தா்கள், விமானப் போக்குவரத்து, சா்க்கரை, துறைமுகம் மற்றும் அது சார்ந்த சேவைகள், கப்பல் போக்குவரத்து, கட்டட கட்டுமானத்துக்கான பொருள்கள், பெருநிறுவன சில்லறை விற்பனையகங்கள் உள்ளிட்ட 26 துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கே.வி.காமத் குழுவின் பரிந்துரையை இந்திய ரிசா்வ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. 
  • கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்காக 5 அம்ச திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
  • ஸ்டார்ட் அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவனங்களை தொடங்குவதற்கான சூழலுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு, மாநிலங்களின் இந்த தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 
  • உலக வங்கி, 174 நாடுகளில், கல்வியறிவு பெற்ற குழந்தைகள், அவர்களின் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில், ஆண்டுதோறும், மனித மூலதன குறியீட்டு பட்டியலை வெளியிடுகிறது. 
  • புற்றீசல் போல் பெருகும் ஐ.வி.எஃப். மையங்களை கட்டுப்படுத்த இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 - மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
  • கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து இந்தியா நடப்பு ஆண்டில் மீள்வதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. மாறாக, கடும் சரிவை சந்திக்கும் என்று, பொருளாதார நிபுணர்கள், நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 
  • அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், சிறப்பாக பயிற்றுவித்ததற்காக, அம்பத்துார் அரசு தொழிற் பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர் சுகுமாருக்கு, பொறியியல் அல்லாத பிரிவில், மாநில மற்றும் தேசிய அளவிலான, 'கவ்சலாச்சாரியா' விருது
  • மதுரை அரசு தொழிற் பயிற்சி நிலைய, உதவி பயிற்சி அலுவலர் செல்வேலுக்கு, பொறியியல் பிரிவில், மாநில அளவிலான, 'கவ்சலாச்சாரியா' விருதும், மத்திய அரசால் வழங்கப்பட்டது.
  • பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தரவு அடிப்படையிலும், தங்கள் நகரங்கள் எவ்வளவு “ஸ்மார்ட்” என்பதை பற்றிய குடிமக்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel