சுவாமி விவேகானந்தர் அசாம் இளைஞர் அதிகாரமளித்தல் திட்டம் Swami Vivekananda Assam Youth Empowerment (SVAYEM)
TNPSCSHOUTERSSeptember 05, 2020
0
இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நோய் பாதிப்பால் புலம்பெயர்ந்தோர் உட்பட நாட்டில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.
அவர்களுக்கு மீண்டும் வேலையை ஏற்படுத்தி கொடுக்க ஒவ்வொரு மாநில அரசும் தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
ரூ,1000 கோடி மதிப்புடன் சுய வேலைவாய்ப்பு திட்டத்தை மாநில அரசு துவங்கி உள்ளது. சுவாமி விவேகானந்தர் அசாம் இளைஞர் அதிகாரமளித்தல் (Swami Vivekananda Assam Youth Empowerment (SVAYEM)) என அழைக்கப்படும் இந்த திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு வணிக முயற்சிகளைத் தொடங்க தலா ரூ.50,000 வரை பணமாக வழங்கும்.
இது அடுத்த மூன்று மாதங்களில் எந்தவொரு வங்கி தொடர்பும் இல்லாமல் செலவிடப்படும். 2 லட்சம் பயனாளிகள் செப்.,1 க்கு முன் சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்புக் குழுக்கள் போன்றவற்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் நன்மைகளைப் பெற விரும்பும் குழுக்கள் செப்., 16 ஆம் தேதி தொடங்கப்படும் புதிய போர்ட்டலில் தங்களை பதிவு செய்ய முடியும்.