Type Here to Get Search Results !

TNPSC ECONOMY CURRENT AFFAIRS SEPTEMBER 2020

 இந்திய பொருளாதாரம் NEW BOOK STUDY MATERIALS



SYLLABUS IN ENGLISH 
  • Nature of Indian economy – Five year plan models - an assessment – Planning Commission and Niti Ayog.
  • Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy - Finance Commission – Resource sharing between Union and State Governments - Goods and Services Tax.
  • Structure of Indian Economy and Employment Generation, Land reforms and Agriculture - Application of Science and Technology in agriculture - Industrial growth - Rural welfare oriented programmes – Social problems – Population, education, health, employment, poverty.
TNPSC ECONOMY CURRENT AFFAIRS :
  1. சீன உற்பத்தியில் இருந்து துண்டித்தல் - ஒரு மதிப்பீடு -1
  2. சீன உற்பத்தியில் இருந்து துண்டித்தல் - ஒரு மதிப்பீடு -2
  3. இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் பொருளாதார தாக்கம் 2020

நடப்பு விவகார -பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது.
NEW RELEASED JUNE 2020 PDF-TNPSC SHOUTERS PDF

TNPSC ECONOMY CURRENT AFFAIRS SEPTEMBER 2020

  1. ரபோபங்கின் குளோபல் 20 பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய நிறுவனம் அமுல் : அமுல், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனம் ரபோபங்கின் உலகளாவிய முதல் 20 பால் நிறுவனங்களின் பட்டியலில் 16 வது இடத்தைப் பிடித்தது. அமுல் ஆண்டு வருவாய் 5.5 பில்லியன் டாலர்களை அடைந்துள்ளது.
  2. சீனாவைச்சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆசுதிரேலியா ஆகிய மூன்று நாடுகள் முத்தரப்பு ‘விநியோகச் சங்கிலி நெகிழ்திறன் முன்னெடுப்பைத் (SCRI)’ தொடங்குவதற்கான விவாதங்களைத் தொடங்கியுள்ளன. இந்த முன்னெடுப்பை முதன்முதலில் ஜப்பான் முன்மொழிந்தது. இம்முன்னெடுப்பை முன்னோக்கி நகர்த்துவதற்காக இந்தியாவை அது அணுகியது. இதற்காக, மூன்று நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் பங்கேற்கும் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
  3. மேக் இன் இந்தியாவை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ரூ .2,580 கோடி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது . மேக் இன் இந்தியாவை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகம் ரூ .2,580 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்திய ராணுவத்திற்கு ஆறு பினாகா ரக  ஆயுதங்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்கள் டாடா பவர் கம்பெனி, பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் மற்றும் லார்சன் & டூப்ரோ இடையே கையெழுத்தானது.
  4. உலக பொருளாதார சுதந்திர குறியீடு 2020 (Global Economic Freedom Index, 2020) ல் இந்தியா 105 வது இடத்தைப் பெற்றுள்ளது . கடந்த ஆண்டு (2019) 79 வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது. The Heritage Foundation மற்றும் The Wall Street Journal மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  5. 2020 செப்டம்பர் 10 அன்று வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கையின்படி, உலகளாவிய பொருளாதார சுதந்திர குறியீட்டு 2020 இல் இந்தியா 26 இடங்கள் சரிந்து 105 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தரவரிசையில் நாடு 79 வது இடத்தில் உள்ளது.
கரோனா நெருக்கடியால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 23.9% பின்னடைவு:
  • கரோனா நோய்த்தொற்று காரணமாக அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க அறிவிப்புகளால் இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 23.9 சதவீத பின்னடைவை சந்தித்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசு 31.08.2020 வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: கரோனா தொடா்பான பொது முடக்க அறிவிப்புகளால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. 
  • ஏற்கெனவே, நுகா்வோா் தேவை மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் பெருமளவில் குறைந்து போயுள்ளன. இதனை எடுத்துக்காட்டும் வகையில், நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 23.9 சதவீதம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 
  • உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக திகழும் இந்தியாவின் ஜிடிபி முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டில் 3.1 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 5.2 சதவீதமாகவும் வளா்ச்சி கண்டிருந்தது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. ஜிடிபி வளா்ச்சி தொடா்பான கணக்கீடு கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியானதிலிருந்து அதன் வளா்ச்சி தற்போதுதான் இந்த அளவுக்கு முதல்முறையாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 
  • பல ஆய்வாளா்கள் கணித்ததைக் காட்டிலும் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கரோனாவால் அதிகம் பாதிப்படைந்த ரஷியாவில் பொருளாதார வளா்ச்சியானது ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 8.5 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது. இது, எதிா்பாா்த்த அளவைக் காட்டிலும் குறைவான பின்னடைவாகவே கருதப்படுகிறது.அதேசமயம், கரோனா தொற்று முதலில் ஆரம்பமான சீனாவின் பொருளாதாரம் இக்காலாண்டில் 3.2 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.
  • இன்று வெளியிடப்பட்ட ஜிடிபி புள்ளிவிவரத்தில், வேளாண் துறை மட்டுமே ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல்காலாண்டில் வேளாண் துறை 3 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 
  • உற்பத்தித் துறை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 39.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கட்டுமானத்துறை வளர்ச்சி 50.3 சதவீதம் வீழ்ந்துள்ளது, இது கடந்த ஆண்டின் முதல்காலாண்டில் 5.2 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. சுரங்கத் தொழில் வளர்ச்சி 23.3 சதவீதம் சரிந்துள்ளது, கடந்த ஆண்டின் முதல்காண்டில் 4.7 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது.
  • ஹோட்டல், வர்த்தகம், போக்குவரத்து, தகவல்தொடர்பு, சேவைத்துறை ஆகியவற்றின் வளர்ச்சி 47 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல்காலாண்டில் 3.5சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது.நிதிச்சேவை, ரியல்எஸ்டேட் போன்றவை 5.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 
  • ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நடப்புநிதியாண்டின் 2-ம் காலாண்டிலும் அதாவது ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிலும் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும், வீழ்ச்சி அடையும் என எச்சரித்திருந்தது. ஆனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, கடவுளைக் காரணம் காட்டி, இந்த நிதியாண்டு முழுவதும் பொருளாதார வளர்ச்சி மோசமாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதரம் கடந்த 2017-18-ம் ஆண்டிலிருந்து சரிந்து வருகிறது. 2017-18ம் ஆம்டில் 7 சதவீதமாக இருந்த பொருளதார வளர்ச்சி, 2018-19ம் ஆண்டில் 6.1 சதவீதமாக குறைந்தது, 2019-20ம் ஆண்டில் 4.2 சதவீதமாகச் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஜப்பான் இடையே ஜவுளி துறை ஒத்துழைப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • ஜப்பான் நாட்டு சந்தைக்கு ஏற்றவாறு இந்திய ஜவுளிகள் மற்றும் ஆடைகளின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் பரிசோதிப்பதற்காக இந்தியாவின் ஜவுளிகள் ஆணையம் மற்றும் ஜப்பானின் நிசன்கென் தர மதிப்பீடு மையம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இதனால் தொழில்நுட்பத் துறைக்கான ஜவுளிகள் மற்றும் துணி வகைகளை இந்தியாவில் பரிசோதிக்கும் பணிகளை நிசன்கென் தர மதிப்பீடு மையத்தின் சார்பாக ஜவுளிகள் ஆணையம் மேற்கொள்ளும்.
கடன் பத்திரங்கள் மூலம் ரூ.50,500 கோடி திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் திட்டம்
  • பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலமாக ரூ.50,500 கோடி திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் திட்டமிட்டுள்ளது. 
  • அதுகுறித்து அந்த நிறுவனம் 02/09/2020 வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் வரும் 28-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் ரூ.50,500 கோடி திரட்டுவதற்கு பங்குதாரா்களிடம் ஒப்புதல் கேட்கப்படும். 
  • அவா்கள் ஒப்புதல் அளித்த பிறகு கடன் பத்திரங்களை வெளியிட செயற்குழு இயக்குநா்களுக்கு அதிகாரம் அளித்து சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்படும். கடன் பத்திரங்கள் மூலமாக திரட்டப்படும் நிதி ரூ.50,500 கோடிக்கு மிகாமல் இருக்கும். 
  • எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் பெறும் திறன் ரூ.3 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வரம்புக்கு உள்பட்டே ரூ.50,500 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஹோம் உட்சவ்’ எனும் ஆன்லைன் கண்காட்சி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியால் தொடங்கப்பட்டது 
  • ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ‘ஹோம் உட்சவ்’ என்ற பெயரில் மெய்நிகர் சொத்து கண்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்காட்சி இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் திட்டங்களை காட்சிப்படுத்துகிறது. 
  • இந்த கண்காட்சியை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவரும்homeutsavicici.com எனும் இணையதலத்தில் அணுகலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) தனது வருடாந்திர அறிக்கை 2019-20
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) தனது வருடாந்திர அறிக்கை 2019-20 என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
  • இந்த அறிக்கையின்படி, 2019-20 ஆம் ஆண்டில் மொத்த வருவாயானது 28.97% என்ற அளவில் அதிகரித்துள்ளது. 
  • RBIயின் இருப்பு நிலையானது 13.42% என்ற அளவில் அதிகரித்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் அதன் மொத்த வருவாயானது ரூ.1,49,672 ஆக இருந்தது. இது 2019-20 ஆம் ஆண்டில் 1,93,036 ஆக உள்ளது. 
  • அதன் செலவினமானது 39.72% என்ற அளவில் குறைந்துள்ளது. வங்கியின் வட்டி வருவாயானது 44.62% ஆக அதிகரித்துள்ளது. அரசுப் பங்குகளில் RBIயின் இருப்பு நிலையானது 57.19% ஆக அதிகரித்துள்ளது. 
  • வங்கி மோசடி வழக்குகளின் மதிப்பானது 74% ஆக அதிகரித்துள்ளது. வங்கி மோசடி வழக்குகளின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் 6800 ஆக அதிகரித்துள்ளது. 
  • இது 2018 ஆம் ஆண்டில் 5900 ஆக இருந்தது. வங்கி அமைப்பின் நிகர வாராக் கடன் விகிதமானது 9.1% ஆகக் குறைந்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 11.2% ஆக இருந்தது. 
  • தற்போது புழக்கத்தில் உள்ள பணமானது 17% ஆக அதிகரித்துள்ளது. இது 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 21.10 டிரில்லியன் ஆக இருந்தது. 
  • 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை, RBI ஆனது 618.16 மெட்ரிக் கடன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் 566,23 டன்களாக இருந்தது.
EOHO – Eat Out to Help Out
  • இந்தத் திட்டமானது (EOHO – Eat Out to Help Out) ஐக்கிய இராஜ்ஜியத்தில் கோவிட் – 19 நோய்த் தொற்று காரணமான பொது முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட இருக்கும் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சம்பந்தமான வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக வேண்டி அந்நாட்டு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு பொருளாதார மீட்டெடுப்புத் திட்டமாகும். 
  • இந்தத் திட்டமானது கோடைக்காலப் பொருளாதாரப் பணிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • EOHO திட்டத்தின் கீழ், அந்நாட்டு அரசானது ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து வாரங்களிலும் திங்கள் முதல் புதன் வரை விடுதிகளில் உணவுகளுக்கு (உணவு மற்றும் மதுபானம் அல்லாத நீராகாரங்கள்) 50% மானியம் அளிக்க இருக்கின்றது.
ஒருங்கிணைந்த நிறுவன அடையாளமான Vi ஆனது வோடபோன் மற்றும் ஐடியா:
  • ஒருங்கிணைந்த நிறுவன அடையாளமான Vi ஆனது வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தப் புதிய நிறுவன அடையாளமானது “நாளைய தினத்திற்காக ஒன்றிணைதல்” என்ற எழுத்துருவைக் கொண்டுள்ளது. 
  • இந்த 2 நிறுவனங்கள் 2018 ஆம் ஆண்டில் இணைந்தன. இந்த இணைப்பானது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தினால் இறுதி செய்யப் பட்டது.
புதிய வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, 2020 மூலம் கூட்டுறவு வங்கிகளை மறுசீரமைக்க ரிசர்வ் வங்கியின் அதிகார நீட்டிப்பு:
  • கூட்டுறவு வங்கிகளை மறுசீரமைப்பதற்கான அதிகாரங்களை இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் புதிய வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதாவை அறிமுகப்படுத்தியது. மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் ரிசர்வ் வங்கியின் வங்கி விதிமுறைகளின் அதிகாரம் கூட்டுறவு வங்கிகளுக்கு நீட்டிக்கப்படும்.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் -5.9%, 2021 இல் 3.9% என UNCTAD கணித்துள்ளது
  • வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு பிரச்சினைகள் ஆகியவற்றைக் கையாளும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்தின் ஒரு பகுதியாக வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (யுஎன்சிடிஏடி) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 2020 ஆம் ஆண்டில் -5.9 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டில் 3.9 சதவீதமாகவும் கணித்துள்ளது.
  • முன்னறிவிக்கப்பட்ட அறிக்கை UNCTAD இன் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அறிக்கை 2020 இல் தயாரிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel