TNPSC SHOUTERS - DECEMBER 2018
CURRENT AFFAIRS
| ||
S.NO
|
DAY & MONTH
|
DOWNLOAD LINK
|
1.
|
1st DECEMBER 2018
| |
2.
|
2nd DECEMBER 2018
| |
3.
|
3rd DECEMBER 2018
| |
4.
|
4th DECEMBER 2018
| |
5.
|
5th DECEMBER 2018
| |
6.
|
6th DECEMBER 2018
| |
7.
|
7th DECEMBER 2018
| |
8.
|
8th DECEMBER 2018
| |
9.
|
9th DECEMBER 2018
| |
10.
|
10th DECEMBER 2018
| |
11.
|
11th DECEMBER 2018
| |
12.
|
12th DECEMBER 2018
| |
13.
|
13th DECEMBER 2018
| |
14.
|
14th DECEMBER 2018
| |
15.
|
15th DECEMBER 2018
| |
16.
|
16th DECEMBER 2018
| |
17.
|
17th DECEMBER 2018
| |
18.
|
18th DECEMBER 2018
| |
19.
|
19th DECEMBER 2018
| |
20.
|
20th DECEMBER 2018
| |
21.
|
21st DECEMBER 2018
| |
22.
|
22nd DECEMBER 2018
| |
23.
|
23rd DECEMBER 2018
| |
24.
|
24th DECEMBER 2018
| |
25.
|
25th DECEMBER 2018
| |
26.
|
26th DECEMBER 2018
| |
27.
|
27th DECEMBER 2018
| |
28.
|
28th DECEMBER 2018
| |
29.
|
29th DECEMBER 2018
| |
30.
|
30th DECEMBER 2018
| |
31.
|
31st DECEMBER 2018
|
900 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் அமைத்த தூம்பு தமிழகத்தில் கண்டெடுப்பு
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கரமசோழன் ஆட்சிக் காலத்தில் பெண்ணை வடகரை மேற்கோவலூர் நாட்டு கோவலூரைச் சேர்ந்த இலச்சியமுடையான் உழியன் மாதன் என்பவர் சோழாந்தகப் பல்லவராயன் வடுகன் ஆளவந்தான் நினைவாக இந்தத் தூம்பினை அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
- இந்த கல்வெட்டில் முக்கிய குறிப்பாக "இந்தத் தூம்பினை காப்பவர்கள் காலடியை என் தலைமேல் காப்பேன்' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் அமைத்த தூம்பு இன்றும் பயன்பாட்டில் உள்ளது
கஜா புயல் பாதிப்பு: மத்திய அரசு ரூ.353 கோடி இடைக்கால நிவாரணம்
- கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
- கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி வீசிய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட எட்டு மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
- நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்ள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. 60க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தென்னை உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் விழுந்துவிட்டன.
- இதற்கிடையே கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். பாதிப்புகள் குறித்து அறிய மத்தியக் குழு ஒன்றையும் ஆய்வுக்காக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதனையடுத்து தமிழகம் வந்த மத்தியக் குழு மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டது.
- இந்நிலையில், கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார். மத்தியக் குழுவின் இறுதி அறிக்கைக்கு பிறகு நிவாரண நிதி கூடுதலாக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா விமானம்
- உடல் உறுப்புகளை ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
- இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குட்டி விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அதை இறக்குவதற்கும் தேவையான வசதிகளை ஆஸ்பத்திரிகளில் முதலில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும்.
முதன் முறையாக மல்யுத்தத்திலும் சம்பள ஒப்பந்தம் : அமல்பஜ்ரங், வினேஷ், பூஜாவுக்கு ரூ.30 லட்சம்
- இந்திய மல்யுத்த சங்கம் முதன் முறையாக வீரர், வீராங்கனை களுக்கு சம்பள ஒப்பந்தத்தை அமல்படுத்தியுள்ளது.
- இதன்படி ஏ பிரிவில் நட்சத்திர வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், பூஜா தன்டா ஆகியோர் இடம் பெற்றுள் ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளமாக வழங்கப் படும்.
- பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோர் இந்த ஆண்டு நடை பெற்ற காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர். அதேவேளையில் பூஜா தன்டா உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
- இருமுறை ஒலிம்பிக்கில் பதக் கம் வென்ற சுஷில் குமார், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய சாக் ஷி மாலிக் ஆகியோர் சம்பள ஒப்பந்தத்தில் பி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒராண்டுக்கு ஊதியமாக தலா ரூ.20 லட்சம் பெறுவார்கள்.
- சி பிரிவில் சந்தீப் தோமர், சஜன் பன்வால், வினோத் ஒம் பிரகாஷ், ரித்து போகத், சுமித் மாலிக், தீபக் பூனியா, திவ்யா கரண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஊதியமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
- டி பிரிவில் இடம் பெற்றுள்ள ராகுல், நவீன், சச்சின் ரதி, விஜய், ரவி குமார், சிம்ரன், மான்ஷி, அன்சு மாலிக் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உலகில் 2018ல் நடந்த மிக பெரிய அழிவு: கேரள வெள்ளம் முதலிடம்
- குறிப்பாக, வெள்ளத்தால் 14 மாவட்டங்களில் 54 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், 443 பேர் பலியானதாகவும், அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
- மேலும் சர்வதேச வானிலை மையத்தின் அறிக்கையில்,தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் 2018 மிகவும் வெப்பமானதாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜப்பான், கொரியா, நைஜீரியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டத்து. அதே போல், பாகிஸ்தானில் இந்த வருடம் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது.
- உலக அளவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பொருளாதார அளவில் பெருத்த இழப்பினை சந்தித்த முதல் இடமாக அமெரிக்காவின் ஃப்ளோரண்ஸ் மாகாணமும், நான்காவது இடமாக கேரளாவும் அறிவிக்கப்பட்டது.
- சராசரியாக 53 புயல்கள் மட்டுமே ஒவ்வொரு வருடமும் ஏற்படும். ஆனால் இந்த வருடம் மட்டும் சுமார் 70 புயல்கள் உருவாகியுள்ளன. அவை அனைத்தும் வடக்கு ஹெமிஸ்பியரில் ஏற்பட்டதன் விளைவாக 2018ம் ஆண்டில் அனேக ஐரோப்பிய நாடுகள் கடுமையான வறட்சியை சந்தித்தன.
- இந்த வருடம் மட்டும் 17.7 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இதில் மழை மற்றும் இதர கால நிலை மாற்றங்களால் 2.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டின் பிரபலமான வார்த்தையை கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி
- இந்த வார்த்தைக்கான அர்த்தம் இதுதான் - செல்போன் கையில் இல்லாமல் போனாலோ அல்லது செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது செல்போனை பயன்படுத்த முடியாமல் அது ஸடக் ஆகி விட்டாலோ அல்லது சிக்னல் கிடைக்காவிட்டாலோ வரும் பயம்தான் 'Nomophobia'.
- Nomophobia.. No Mobile phone Phobia.. இதுதான் இந்த வார்த்தையின் விரிவாக்கம். கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி தனது பிளாக் வாசகர்களிடமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தது.இந்த ஆண்டின் வார்த்தை
- Nomophobiaவுடன் போட்டியில் இருந்த மற்ற 3 வார்த்தைகள் gender gap, ecocide மற்றும் no-platforming. ஜென்டர் கேப் அனைவருக்கும் அர்த்தம் தெரியும். ஈகோசைட் என்பது சுற்றுச்சூழல் அழிவு என்பதைக் குறிக்கும் வார்த்தை. கிட்டத்தட்ட சூசைட் போன்ற அர்த்தம். நோ பிளாட்பார்மிங் என்பது, ஒவரது சிந்தனை அல்லது யோசனையை செயல்படுத்தவோ அல்லது ஏற்கனவோ இடம் கொடுக்காமையை குறிக்கும் வார்த்தையாகும்.