
27th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
- இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் "ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்" தனது இறுதி அதிவேகப் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- ஹரியானா மாநிலத்தின் ஜீந்த் - சோனிபட் ரயில்வே வழித்தடத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதி சோதனை நடத்தப்பட்டது. இப்பரிசோதனையின் போது இந்த ரயில், மணிக்கு 120 கிலோமீட்டர் என்ற அசுர வேகத்தில் தடத்தில் பாய்ந்து சென்று சாதனை படைத்தது.
- சென்னை ICF-இல் வடிவமைக்கப்பட்ட 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், 1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் கலன் உந்துவிசை அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
- புகை மற்றும் மாசுவை முற்றிலும் உமிழாத இந்த ஹைட்ரஜன் தொழில்நுட்பம், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வேதிவினையின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்குகிறது. மேலும் இது கழிவாக வெறும் தண்ணீர் நீராவியை மட்டுமே வெளியேற்றுகிறது.
- இந்த புதிய மைல்கல்லின் மூலம், ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலகின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட எலைட் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
- 2030-ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயை முற்றிலும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு கொண்டதாக மாற்றுவதில் இந்த ஹைட்ரஜன் ரயில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.
- மத்திய உளவுப் பிரிவு தலைவர் தபன் தேகாவின் பதவி நீட்டிப்பு இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து உளவுப் பிரிவின் புதிய தலைவராக மகேஷ் தீக்ஷித்தை பிரதமர் மோடி தலைமையிலான நியமனக் குழு நியமித்துள்ளது. இவர் 2 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.
- 1993ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் தீக்ஷித் தனது பணிக் காலத்தில் பெரும்பாலும் உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் 370-வது சிறப்பு சட்டப் பிரிவை நீக்கிய பிறகு, அங்கு இவர் உளவுப் பிரிவு தலைவராக முக்கிய பங்காற்றினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இவர் உளவுப் பிரிவு தலைவராக பணியாற்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை அழித்ததில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

