
15th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கேரளாவில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் முதல்வர் வி.டி.சதீசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- கேரளத்தில் ஜூன் 15 முதல் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்திட்டம் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
- இந்நிலையில், இன்று (15-06-26) கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தை அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- தற்போதைக்கு அரசு நகரப் பேருந்துகளில் மட்டும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், வருங்காலங்களில் இந்த திட்டம் விரைவு பேருந்து உள்ளிட்ட மற்ற பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முன்னதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- இந்த திட்டத்தின் மூலமாகப் பெண்கள் மற்றும் திருநங்கைகள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் ஏற்றுமதி 2026-27-ம் நிதியாண்டின் ஏப்ரல், மே காலகட்டத்தில் 14.66% அதிகரித்துள்ளது.
- 2025-26 ஏப்ரல்-மே காலகட்டத்தில் 141.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஒட்டுமொத்த ஏற்றுமதியுடன் (சரக்குகள், சேவைகள்) ஒப்பிடுகையில் 2026-27 ஏப்ரல்-மே காலகட்டத்தில் 162.69 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 14.66% வளர்ச்சி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- ஏப்ரல்-மே 2025-26 காலகட்டத்தில் 76.59 பில்லியன் டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு, ஏப்ரல்-மே 2026-27 காலகட்டத்தில் 88.91 பில்லியன் டாலராக உயர்ந்து, 16.09% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- மே 2026-ல் சரக்கு ஏற்றுமதி வளர்ச்சியின் முக்கிய காரணிகளாக, பொறியியல் பொருட்கள், கரிம - கனிம வேதிப்பொருட்கள், மின்னணுப் பொருட்கள், ரத்தினக்கற்கள், ஆபரணங்கள் ஆகியவை இருந்தன.
- பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மே 2025-ல் 9.89 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மே 2026-ல் 12.31 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.
- மே 2025-ல் 4.57 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மே 2026-ல் 5.10 பில்லியன் அமெரிக்க டாலராக, மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 11.62% அதிகரித்துள்ளது.
- இந்தியாவின் நட்சத்திர வீரரான 24 வயது தீரஜ் பொம்மதேவரா ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
- உலகக்கோப்பை வில்வித்தையின் ஒற்றையர் பிரிவில் அவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தென் கொரியாவின் ஒலிம்பிக் பதக்க வீரரான லீ வூ சீக்கை தீரஜ் எதிர்கொண்டார்.
- ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அம்பு எய்வதில் தனது அபார திறமையை வெளிப்படுத்திய அவர் 7-3 என்ற கணக்கில் கொரிய வீரரை முழுமையாக வீழ்த்தினார்.
- இந்த இமாலய வெற்றிக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவர் இந்தியாவின் மற்றொரு இளம் வீராங்கனையான கும் கும் மொஹோடுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

