
25th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு
- தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான அதிரடி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
- இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு (முழுமையாக) கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
- அதேபோல, சிறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன் தொகையில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
- ரூ.50,000-க்கு மேல் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரையிலும், சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 வரையிலும் கடன் தொகைக்கு ஏற்பப் படிப்படியாகத் தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- மேலும், ரூ.1,00,000-க்கு மேல் கடன் பெற்றுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகள் இருதரப்பிற்குமே தலா ரூ.5,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 14,22,555 விவசாயிகள் நேரடியாகப் பயனடைவார்கள்.
- இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் தமிழக அரசுக்குக் கூடுதலாக ரூ.2,044.46 கோடி செலவினம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஞ்சியில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பஞ்சாபைச் சேர்ந்த குரிந்தர்வீர் சிங் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்தார்.
- 10.09 வினாடிகளில் இலக்கை எட்டித் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தியாவின் அதிவேக மனிதராக அவர் மிளிர்ந்தார். 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

