
14th DECEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பம்பாய் ஜிம்கானாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு தபால் தலையை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டார்
- பாம்பே ஜிம்கானாவின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் விளையாட்டு சிறப்புமிக்க பாரம்பரியம் மற்றும் தேசத்திற்கு அதன் நீடித்த கலாச்சார பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் துறை ஒரு நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது.
- இந்த நினைவு தபால் தலையை மும்பையில் உள்ள பம்பாய் ஜிம்கானாவில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா முறையாக வெளியிட்டார்.
- பம்பாய் ஜிம்கானாவின் தலைவர் திரு சஞ்சீவ் சரண் மெஹ்ரா, நவி மும்பை பிராந்தியத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமிகு சுசிதா ஜோஷி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.
- 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பம்பாய் ஜிம்கானா, இந்தியாவின் விளையாட்டு மற்றும் சமூக பாரம்பரியத்தின் ஒரு தனித்துவமான தூணாக நிற்கிறது.
- பல தலைமுறை விளையாட்டு வீரர்களை வளர்த்து வருகிறது, அதே நேரத்தில் கலாச்சார மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்கான துடிப்பான மையமாகவும் செயல்படுகிறது.
- ஒன்றரை நூற்றாண்டு காலமாக, விளையாட்டுத்திறன், தோழமை மற்றும் வலுவான சமூக ஈடுபாட்டு உணர்வை வளர்ப்பதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

