
20th NOVEMBER 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பீகாரில் 10வது முறையாக முதலமைச்சர் ஆனார் நிதீஷ் குமார்
- பீகாரில் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, நிதீஷ் குமார் இன்று பாட்னா காந்தி மைதானத்தில் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
- அவருக்கு ஆளுநர் ஆரிப் மொகமத் கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
- துணை முதல்வர்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் ஆகியோர் பதவியேற்றனர். முதல்வர் உட்பட 20 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.
- சட்டமன்றத்தில் போட்டியிடாத நிதீஷ் குமார், சட்டமேலவை உறுப்பினராக நீடிக்கிறார். அவர் மேலும் 5 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தால், நாட்டில் அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையை படைப்பார்.
- இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரான்சின் ஆயுதப் பிரிவு தலைமை இயக்குநரகம் இடையே தொழில்நுட்ப அடிப்படையிலான ஆராய்ச்சிக் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- புதுதில்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் இன்று (20.11.2025) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத் மற்றும் பிரான்சின் தேசிய ஆயுதப் பிரிவு இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் கேல் டையஸ் டி டயூஸ்டா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
- எதிர்காலத்தில் பாதுகாப்புத் துறையில் ஏற்படும் சவால்களுக்கு தீர்வு காணும் முறையில், புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் இரு நாடுகளின் துறை சார்ந்த நிபுணத்துவம் மற்றும் வள ஆதாரங்களை பயன்படுத்தும் வகையிலும் உத்திசார் கூட்டு நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
- பாதுகாப்பு ஆராய்ச்சியில் திறன் மற்றும் அறிவுசார் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் இருநாட்டுப் பாதுகாப்புப் படையினரிடையே கூட்டுப்பயிற்சி, சோதனை நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

