
6th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலகின் உயரமான ரயில்வே பாலம் செனாப் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் ஜம்மு பிராந்தியத்திற்கும் இடையிலான முதல் ரயில் சேவையான ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்தார்.
- வக்பு சொத்துகளை பதிவு செய்யவும், சரிபார்க்கவும், கண்காணிக்கவுமான பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் உமீத் (UMEED) என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதனை தொடங்கிவைத்தார்.
- மாநிலங்கள், மத்திய சிறுபான்மை அமைச்சகத்துடன் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 8.7 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் வக்பு சொத்துகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 4.2 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் முறையான ஆவணங்கள் இன்றி வக்பு சொத்துகளாக நீண்டாக காலமாக இருந்துவருகின்றன.
- நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் அளித்து வருகிறது. அந்த கடன்களுக்கு பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன.
- வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் வட்டி விகிதம் ரெப்போ என்று அழைக்கப்படும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தை நாட்டின் பொருளாதார நிலையை பொறுத்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைப்பது வழக்கம். அதாவது சில்லறை பணவீக்கத்தை பொறுத்துதான் மாற்றியமைக்கும்.
- இந்நிலையில் இன்று பொருளதாரக் கொள்கை தொடர்பாக ரிசர்வ் வங்கி கூட்டம் இன்று நடந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைந்துள்ளார்.
- வழக்கமாக 0.25 சதவீதம் குறைக்கப்படும் நிலையில், இம்முறை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பிப்ரவரி தொடங்கி ஜூன் மாதத்திற்குள் ஒரு சதவதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைந்துள்ளது.