
5th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தில்லியில் மின்சார பேருந்து போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- நீடித்த வளர்ச்சி மற்றும் தூய்மையான நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்தும் வகையில் தில்லி அரசின் முன்முயற்சியின் கீழ், பிரதமர் திரு நரேந்திர மோடி மின்சாரப் பேருந்து போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார்.
- மின்சார பேருந்து போக்குவரத்து தூய்மை மற்றும் பசுமையான தில்லியை உருவாக்க உதவிடும் என்று பிரதமர் கூறினார். இந்த நடவடிக்கை தில்லியில் உள்ள மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
- சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும்.
- லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும்.
- மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, 16.06.2025 (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
- முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, 00:00 மணியாக இருந்தது. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01, 00:00 மணியாக இருந்தது.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது.
- இருப்பினும் நாடு முழுவதும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.
- ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் பொருளாதார-சமூக கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
- சா்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஐ.நா. சாா்பில் நடைபெறும் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதையும் கவுன்சில் கண்காணிக்கும்.
- ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற முடியும். பிராந்திய ரீதியாக நாடுகள் 3 ஆண்டு காலத்துக்குத் தோ்ந்தெடுக்கப்படும்
- ஆசிய கண்டத்தில் இருந்து 11 நாடுகளும், ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் இருந்து 6 நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்படும்.
- இந்நிலையில், 2026-28 ஆண்டுக்கான ஐ.நா. பொருளாதார- சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பதவி காலம் இருக்கும்.
- கடைசியாக 2008 முதல் 2020 வரை 4 முறை இந்த கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றிருந்தது. தற்போது 18 ஆவது முறையாக இந்த கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.
- பொருளாதார மற்றும் சமூக பிரச்னைகள் தொடர்பான கொள்கைகளை பரிந்துரைப்பதில் ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய அமைப்பாக கருதப்படுகிறது.
- இந்தியா, 1998-ம் ஆண்டு முதல் சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளது. சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனம் என்பது, 31 உறுப்பு நாடுகள், 20 தேசிய பிரிவுகள், பொது நிர்வாகம் குறித்த அறிவியல் ஆராய்ச்சிக்காக கூட்டாக ஒத்துழைக்கும் 15 கல்வி ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை இணைந்த ஒரு கூட்டமைப்பாகும்.
- முக்கிய உறுப்பு நாடுகளில் இந்தியா, ஜப்பான், சீனா, ஜெர்மனி, இத்தாலி, கொரியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, மெக்சிகோ, ஸ்பெயின், கத்தார், மொராக்கோ, இந்தோனேசியா போன்றவை அடங்கும்.
- ஐஐஏஎஸ் எனப்படும் சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையுடன் நெருக்கமான பணி உறவைப் பேணி வருகிறது. ஐஐஏஎஸ் ஐநா-வில் முறையாக இணைக்கப்பட்ட அமைப்பாக இல்லாவிட்டாலும், பொது நிர்வாகத்தில் ஐநா-வின் பணிகளில் தீவிரமாக பங்கேற்றுள்ளது.
- 2025-2028-ம் ஆண்டு காலகட்டத்தில் ஐஐஏஎஸ் தலைமைப் பதவிக்கு, இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாசின் பெயரை பிரதமர் திரு நரேந்திர மோடி பரிந்துரைத்தார்.
- தலைமைப் பதவிக்கான தேர்வு நடைமுறை பிப்ரவரி 2025-ல் நடைபெற்றது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஐஐஏஎஸ் நிர்வாக கவுன்சிலின் தேர்வு நடைமுறைகளில் பங்கேற்றன.
- அதைத் தொடர்ந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளின் வேட்புமனுக்கள் அடுத்த சுற்று தேர்வுக்காக ஐஐஏஎஸ்-சின் பொதுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.
- தென்னாப்பிரிக்கா மே 2025-ல் இந்தியாவுக்கு ஆதரவாக தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றது. 2025 ஜூன் 3 அன்று இந்தியாவிற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே நடைபெற்ற தேர்தலில் 141 வாக்குகள் பதிவாயின.
- அதில் இந்தியா 87 வாக்குகளைப் (61.7 சதவீத வாக்குகளைப்) பெற்று பரவலான ஆதரவுடன் வெற்றி பெற்றது. ஆஸ்திரியா 54 வாக்குகளைப் (38.3 சதவீத வாக்குகளைப்) பெற்று தோல்வி அடைந்தது.