
4th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் SE நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும்.
- இந்நிறுவனம், தற்போது, அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை, காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது.
- இத்திட்டத்தில், ரூ. 300 கோடி முதலீட்டில் 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த SOL SpA மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும்.
- ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது.
- 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, ரூ.100 கோடி முதலீடு மற்றும் 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ரூ. 200 கோடி முதலீடு என்ற வகையில், இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.
- பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்த ஆர்சிபி இன்று இறுதிப் போட்டியில் அதே பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
- டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி மட்டுமே 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
- 191 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
- இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் - க்ருணால் பாண்ட்யா - 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்
- எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன் - தொடர் முழுவதும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சாய் சுதர்சன் தேர்வு - ரூ.20 லட்சம்
- ஃபேர் பிளே அவார்ட் - களத்தில் ஒழுக்கத்துடன் செயல்பட்ட அணிக்கு வழங்கப்படும் ஃபேர் பிளே விருது சென்னை அணிக்கு கிடைத்தது
- ஆரஞ்சு தொப்பி - நடப்பு தொடரில் 759 ரன்களை விளாசி சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை தனதாக்கினார் - ரூ.10 லட்சம்
- ஊதா தொப்பி - நடப்பு தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரஷித் கிருஷ்ணா ஊதா தொப்பியை வசப்படுத்தினார் - ரூ.10 லட்சம்
- விலை மதிப்புமிக்க வீரர் - நடப்பு தொடரில் விளையாடிய 16 போட்டிகளில் குறைந்தபட்சம் 25+ ரன்களை சேர்த்து 717 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ் மிகவும் மதிப்புமிக்க வீரராக தேர்வானார் - ரூ.10 லட்சம்