Type Here to Get Search Results !

29th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


29th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

எளிமை ஆளுமை திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
  • தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.5.2025) தலைமைச் செயலகத்தில், மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நிர்வாக சீர்திருத்த முன்னெடுப்பின் மூலமாக "எளிமை ஆளுமை" திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், பொது கட்டிட மேலாண்மைத் துறை சார் சீர்திருத்த முன்னெடுப்பின் "எளிமை ஆளுமை" திட்டத் தமிழ்நாடு அரசால் வழங்க சுகாதார சான்றிதழ், பொது கட்டிட உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்கள் உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல், புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் ஆகிய பத்து சேவைகளின் நடைமுறைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக இணையவழி சேவையை தொடங்கி வைத்தார்.
525 கோடி ரூபாயில் மதிப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 
  • சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில், கலைஞர் பன்னாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா மே 29ஆம் தேதி நடைபெற்றது.
  • கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 37.99 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில், 525 கோடி ரூபாயில் இந்த உலகத் தரம் வாய்ந்த அரங்கம் அமைக்கப்படுகிறது.
  • தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த அரங்கம், 5.12 லட்சம் சதுர அடியில், 10,000 பேர் ஒரே நேரத்தில் பார்வையிடும் கண்காட்சி அரங்கம், 5,000 பேர் அமரக்கூடிய கூட்ட அரங்கம், சிற்றரங்குகள், திறந்தவெளி மேடைகள், உணவகம் மற்றும் 10,000 வாகனங்களுக்கு பார்க்கிங் வசதியுடன் கட்டப்பட உள்ளது.
  • இந்த அரங்கம், தொழில்நுட்பக் கூட்டங்கள், உலக வர்த்தக மாநாடுகள், திரைப்பட விழாக்கள், பன்னாட்டு நிகழ்ச்சிகளுக்கு திரட்டுப்பெறும் இடமாக அமையும். கட்டுமான பணிகளை 18 மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது 30 ஏக்கரில் தொடங்கியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கம், அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்குப் அடிக்கல் நாட்டினார்
  • இந்தியாவில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • ரூ.1010 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நகர எரிவாயு விநியோக திட்டம், அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வேலைத் திட்ட இலக்குகளுக்கு ஏற்ப சுமார் 19 சிஎன்ஜி நிலையங்களை நிறுவுவதன் மூலம், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 100-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று நீதிபதிகள் நியமனம்
  • கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்தூர்கர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது.
  • இந்த பரிந்துரையை ஏற்று மூவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
  • முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் 3 காலியிடங்கள் ஏற்பட்டன. தற்போது, காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel