Type Here to Get Search Results !

11th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


11th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்தியா எகிப்து கூட்டுச் சிறப்பு ராணுவப் படைகளின் பயிற்சி - புயல் III 
  • இந்தியா-எகிப்து கூட்டுச் சிறப்பு ராணுவப் படைகளின் பயிற்சி, புயல்-III ராஜஸ்தானில் மகாஜன் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நிலையத்தில் 2025 பிப்ரவரி 10 முதல் 23 வரை நடைபெறுகிறது. 
  • புயல் ராணுவப் பயிற்சி என்பது இந்தியாவிலும் எகிப்திலும் ஆண்டுக்கு ஒரு முறை மாறி மாறி நடத்தப்படும் நிகழ்வாகும். இந்த நிகழ்வின் கடைசிப் பயிற்சி  2024 ஜனவரியில் எகிப்தில் நடைபெற்றது. 
  • தற்போதைய பயிற்சியில் 25 பேர் கொண்ட இந்தியக் குழுவில் இரண்டு சிறப்புப் படை பட்டாலியன்களின் துருப்புக்கள் இடம் பெற்றுள்ளன. 
  • எகிப்திய சிறப்புப் படைகளின் சிறப்புப் படைக் குழு மற்றும் பணிக்குழுவின் 25 பணியாளர்கள் அடங்கிய எகிப்து குழுவும் இடம் பெற்றுள்ளது.
  • இரு நாடுகளுக்கு இடையே உள்ள இராணுவ உறவுகளை மேம்படுத்துதல், கூட்டுத்தன்மை மற்றும் சிறப்பு நடவடிக்கையின்  பரஸ்பர பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளுக்கு இடையே ராணுவ உறவுகளை மேம்படுத்துவது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
  • இப்பயிற்சி ராணுவ நடவடிக்கைகளில் இரு தரப்பினரும் தங்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள உதவும். இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே நல்லிணக்கம் மற்றும் நட்புறவை வளர்ப்பதற்கும் இந்தப் பயிற்சி உதவும்.
ஏஐ குறித்த சர்வதேச உச்சி மாநாடு பிரதமர் மோடி பங்கேற்றார்
  • ஏஐ தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் உலகின் நன்மைக்காகப் பயன்படுத்து குறித்து விவாதிப்பதற்கான சர்வதேச உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் இன்று (பிப்.11) தொடங்கியது.
  • இம்மாநாட்டின் இணை தலைமையாக இந்தியா உள்ள நிலையில் பிரதமர் மோடி, இதில் கலந்துகொண்டார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் ஜாங் குவோகிங் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளர். 
  • சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை ஜாம்பவான்களும் இக்கூட்டத்தில் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்க உள்ளனர். 
  • இந்த உச்சி மாநாட்டில் இணைத் தலைவர் என்ற முறையில் பேசிய பிரதமர் மோடி, "AI ஏற்கெனவே நமது வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது. 
  • இந்த நூற்றாண்டில் மனிதநேயத்திற்கான 'கோட்'-ஐ AI எழுதி வருகிறது. ஆனால், அது வரலாற்றில் மற்ற தொழில்நுட்ப மைல்கற்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. AI முன்னோடியில்லாத அளவில் வளர்ந்து வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel