Type Here to Get Search Results !

18th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணி -  முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று காலை 11.20 மணி அளவில் சென்னையில் இருந்து தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.
  • கீழடியில் இதுவரை மூன்று கட்டங்களாக மத்திய அரசு அகழாய்வுத் துறையும், ஆறு கட்டங்களாக தமிழ்நாடு தொல்லியல் துறையும் மொத்தம் ஒன்பது கட்டங்களாக அகழாய்வுப் பணி செய்து வந்தது.
  • பத்தாம் கட்ட அகழாய்வுப் பணி பிப்ரவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக கால தாமதம் ஏற்பட்டது.
  • இந்த நிலையில், இன்று காலை தொடங்கப்பட்டுள்ள இந்த பத்தாம் கட்ட அகழாய்வுப் பணி ஓராண்டுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கீழடியில் இன்று நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் ஆதரவு திட்டத்திற்காக ரூ.20,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி
  • வாரணாசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றதை அடுத்து முதல்முறையாக அங்கு சென்றார்.
  • பிரதமராக பதவியேற்றப் பிறகு 17 ஆவது தவணை பிஎம் கிஷான் சம்மன் நிதியை வெளியிடுவதற்கான கோப்பில் முதலாவதாக கையெழுத்திட்டார்.
  • இத்திட்டத்தின் கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தவணையை நேரடிமுறை பணப் பரிமாற்றம் மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.
  • இந்த விழாவில் பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிகிச்சையளிக்க தோல் வங்கி வசதியை ராணுவ மருத்துவமனை அறிமுகம்
  • ஆயுதப்படை மருத்துவ சேவைகளுக்குள் முதல் அதிநவீன தோல் வங்கி வசதியை 2024, ஜூன் 18 அன்று திறப்பதாக ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க முயற்சி, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்படும் மோசமான தீக்காயங்கள் மற்றும் பிற தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதிய தோல் வங்கி, தோல் ஒட்டுக்களின் சேகரிப்பு, செயலாக்கம், சேமிப்பு மற்றும் விநியோகத்திற்கான ஒருங்கிணைக்கப்பட்ட மையமாக செயல்படும். இது நாடு முழுவதும் உள்ள ராணுவ மருத்துவ மையங்களுக்கு ஒரு முக்கியமான ஆதாரத்தை வழங்கும். 
  • இந்த வசதியை நிறுவுவதன் மூலம், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மிகவும் மேம்பட்ட தோல் மாற்று சிகிச்சைகள் கிடைப்பதை ஆயுதப்படைகள் உறுதி செய்கின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel