4th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அசாம் கவுகாத்தியில் ரூ.11,600 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி
- அசாம் கவுகாத்தியில் ரூ.11,600 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சில திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
- புனித தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் ’மா காமாக்ய திவ்யா பரியோஜனா’ திட்டத்திற்கும், வடகிழக்குப் பிராந்தியத்தின் விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- மேலும், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.3,250 கோடி செலவில் கட்டப்படவுள்ள கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த புதிய கட்டிடத்துக்கு பிரதமர் மோடி (பிப்.4) அடிக்கல் நாட்டினார்.
- தொழிலக உற்பத்தி குறியீட்டு எண்ணான ஐஐபி-யில் 40.27 சதவீதம் பங்கு வகிக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி கடந்த நவம்பரில் 4 மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.
- இந்த நிலையில், முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த டிசம்பா் மாதத்தில் 3.8 சதவீதமாக சரிந்தது. இது கடந்த 14 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச வளா்ச்சியாகும்.
- அந்த மாதத்தில் கச்சா எண்ணெய், சிமென்ட், மின்சாரம், உருக்கு மட்டுமின்றி சுத்திகரிப்பு பொருள்கள், உரம் ஆகியவற்றின் உற்பத்தியும் சரிவைக் கண்டது. இது, முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி மிகக் குறைவான வளா்ச்சியைப் பதிவு செய்வதற்குக் காரணமாக அமைந்தது.
- முந்தைய 2022-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தில் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 8.3 சதவீதமாக இருந்தது.
- நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் முந்தைய அக்டோபா் மாதத்தில் 12 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தன. எட்டு துறைகளின் உற்பத்தி வளா்ச்சி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 8.1 சதவீதமாக உள்ளது.
- 2022 டிசம்பரில் 2.6 சதவீதமாக இருந்த இயற்கை எரிவாயு உற்பத்தி மட்டுமே மதிப்பீட்டு மாதத்தில் 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் கச்சா எண்ணெய் உற்பத்தி 1 சதவீதம் குறைந்துள்ளது.
- மின்சாரம், உருக்கு, சிமென்ட் ஆகியவற்றின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 2022 டிசம்பரில் முறையே 10.4 சதவீதம், 12.3 சதவீதம், 9.5 சதவீதமாக இருந்தது.
- இது, கடந்த 2023 டிசம்பரில் முறையே 0.6 சதவீதம், 5.9 சதவீதம் மற்றும் 1.3 சதவீதம் குறைந்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- தொழில் துறை உற்பத்திக் குறியீட்டில் (ஐஐபி) இந்த எட்டு முக்கியத் துறைகள் மட்டும் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குவதால் அந்தத் துறைகள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.
- கொல்கத்தாவில் உள்ள 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜினீயர்ஸ்' நிறுவனம் இந்திய கடற்படைக்காக 4 ஆய்வுக் கப்பல்களை தயாரித்து வருகிறது.
- இதில் முதல் கப்பலான 'ஐஎன்எஸ் சந்தாயக்' கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து துறைமுகம் மற்றும் கடலில் விரிவான சோதனை நடைபெற்றது.
- இந்நிலையில் இந்திய கடற்படையில் 'ஐஎன்எஸ் சந்தாயக்' நேற்று (பிப். 03) முறைப்படி இணைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை கடற்படையில் இணைத்து வைத்தார்.
- கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.