18th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- கோயம்புத்தூர் எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 27 மற்றும் 28வது வார்டு பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதற்கான ஒப்புகை சீட்டுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
- அதேநேரத்தில் தமிழக அமைச்சர்கள் அவர்களுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களிலும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.
- வாராணசி-தில்லி இடையேயான 2-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- செவ்வாய் கிழமை தவிர, வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்த ரயில் வாராணசியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:05 மணிக்கு புதுதில்லி சென்றடையும். பின்னர் மறுமார்க்கமாக மதியம் 3 மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பி வாராணசிக்கு இரவு 11:05 மணிக்கு வந்தடைகிறது.
- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள உமாரஹாவில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மகரிஷி சதாஃபல் தேவ் ஜி மகராஜின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர், கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்.