Type Here to Get Search Results !

5th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


5th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலர்ஸ் தொலைக்காட்சி ஒப்பந்தம்
  • இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்குத் தொலைக்காட்சி அலைவரிசையான கலர்ஸ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற முன்முயற்சியுடன் இணைந்து செயல்படுகிறது. 
  • பெண் குழந்தைகளைக் கைவிடும் பிரச்சினையை நிவர்த்தி செய்ய புதிய புனைக்கதை நிகழ்ச்சியான “டோரீ” என்ற இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் ஒளிபரப்புகிறது. 
  • பெண் குழந்தைகள் கைவிடப்படுவதன் சமூக தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை கலர்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. டோரீ தொடர் 2023 நவம்பர் 6 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஆயுதப்படைகளில் பெண் வீரர்களுக்கு மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பான விடுப்புகளை அவர்களின் அதிகாரிகளுக்கு இணையாக வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல்
  • ஆயுதப்படைகளில் உள்ள பெண் வீரர்கள், பெண் மாலுமிகள் மற்றும் பெண் விமானப் படை வீரர்களுக்கு மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பான விடுப்புகளை அவர்களின் அதிகாரிகளுக்கு இணையாக வழங்குதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். 
  • இந்தப் புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், பாதுகாப்புப் படைகளில் உள்ள அனைத்து பெண்களுக்கும், ஒருவர் அதிகாரியாக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் பதவியில் இருந்தாலும், இத்தகைய விடுப்புகள் சம அளவில் கிடைக்கும்.
  • ஆயுதப்படைகளில் அனைத்து பெண்களுக்கும், அவர்களின் பதவிகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு என்ற பாதுகாப்பு அமைச்சரின் பார்வைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
  • விடுப்பு விதிகளை அனைவருக்கும் ஒரே மாதிரியாக விரிவுபடுத்துவது என்பது, ஆயுதப்படைகளுடன் தொடர்புடைய அனைத்துப் பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்குப் பயனளிக்கும். 
  • இந்த நடவடிக்கை ராணுவத்தில் பெண்களின் பணிச் சூழலை மேம்படுத்துவதோடு, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சிறந்த முறையில் சமநிலைப்படுத்த உதவும்.
சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடர் - இந்திய அணி வெண்கலப் பதக்கம்
  • மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் நடைபெற்று வந்த சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. 
  • இந்திய அணி சார்பில் அருண் ஷஹானி 11-வது நிமிடத்திலும், 42-வது நிமிடத்தில் பூவன்னாவும், 52-வது நிமிடத்தில் உத்தம் சிங்கும் கோல் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சுஃப்யான் கான் (33-வது நிமிடம்), அப்துல் கயூம் (50-வது நிமிடம்), ஷாஹித் ஹன்னன் (57-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
  • இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்பில் இரு அணிகள் தரப்பிலும் தலா 4 கோல்கள் அடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 'சடன்டெத்' விதி முறை கடைபிடிக்கப்பட்டது. 
  • இதில் இந்திய அணி தரப்பில் விஷ்ணுகாந்த் சிங், அங்கத் பிர் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அர்ஷத் லியாகத் கோல் அடித்தார். 
  • அந்த அணியின் கேப்டன் ஷாஹித் ஹன்னனின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய அணியின் கோல் கீப்பர் மோஹித் அற்புதமாக தடுத்தார். இதனால் இந்திய அணி 6-5 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel