20th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இணையவழி மூலமாக நிலஅளவைக்கு (F-Line measurement) விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, பொதுமக்களின் வசதிக்காக 'எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' நிலஅளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
- இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நிலஅளவை செய்ய விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- பொதுமக்கள் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.
- மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட 'அறிக்கை/வரைபடம்' ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- விஜயபாஸ்கர், ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ அனுமதி கோரியது. 2022 செப்.12ல் அனுமதி கோரிய நிலையில் 14 மாதங்களுக்கு பிறகு நவ.13ல் ஆளுநர் ரவில் ஒப்புதல் அளித்துள்ளார்.
- குட்கா முறைகேடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது.