17th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
செழிப்புக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் (IPEF) விநியோக சங்கிலி ஒப்பந்தத்தில் 14 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன
- முன்னேற்றத்துக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) மூன்றாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தை 14.11.2023 அன்று கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்கா நடத்தியது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
- ஐபிஇஎஃப் அமைப்பு, அமெரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பிற நாடுகளால் கூட்டாக மே 23, 2022 அன்று டோக்கியோவில் தொடங்கப்பட்டது.
- ஆஸ்திரேலியா, புருனே, பிஜி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரிய குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளை ஐபிஇஎஃப் உறுப்பினராக கொண்டுள்ளது.
- பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார ஈடுபாட்டை வலுப்படுத்த இது முயல்கிறது.
- இந்தக் கட்டமைப்பு, வர்த்தகம் தொடர்பான நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள், தூய்மைப் பொருளாதாரம், நியாயமான பொருளாதாரம் ஆகியவை அந்த நான்கு தூண்களாகும்.
- முதலாவது தூண் அமைப்பில் இந்தியா பார்வையாளராக உள்ளது. பிற மூன்று கட்டமைப்புகளில் இந்தியா உறுப்பு நாடாக உள்ளது. தற்போது நடைபெற்ற ஐபிஇஎஃப் அமைச்சர்கள் கூட்டத்தின் போது விநியோக சங்கிலி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ஸ்பெயினில் ஜூனில் நடந்த தேர்தலில் மத்திய வலது பாப்புலர் கட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது. ஆனால் மூன்றாவது இடத்தை பிடித்த தீவிர வலதுசாரி வோக்ஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் அரசு அமைப்பதற்கான ஆதரவை பெற முடியவில்லை.
- இந்நிலையில் பொறுப்பு பிரதமராக இருந்த பெட்ரோ சான்செஸின் சோசலிச கட்சியானது 121 இடங்களை பிடித்து இரண்டாவது இடத்தை பிடித்தது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு போதுமான ஆதரவை பெறவேண்டி இருந்தது.
- இந்நிலையில் 2 நாட்கள் விவாதத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் 350 உறுப்பினர்கள் கொண்ட கீழவையில் 179 பேர் பெட்ரோ சான்செஸ்சுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- வலது சாரி எதிர்கட்சிகள் மட்டும் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.