12th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி
- சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி - உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு விதிமுறைகளை வகுத்து வழி நடத்தி வருகிறது. ஒரு நாட்டின் கிரிக்கெட் அணியின் அடிப்படை விதி முதல், ஒரு தனிப்பட்ட கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட விதி வரை ஐசிசியின் விதை இருந்திட கூடும்.
- ஒரு அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் ஐசிசியின் முழுமையான உறுப்பினராக அல்லது இணை உறுப்பினராக இருந்திட வேண்டும்.
- ஐசிசியில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், அந்நாடுகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஐசிசி ஒப்புதல் அளிக்கும். ஐசிசியின் விதிமுறைகளை மீறினால் அதற்கு வெகுமதியாக அந்த குறிப்பிட்ட நாடானது, ஐசிசியின் உறுப்பினர் உரிமத்தை இழந்திட கூடும்.
- இவ்வாறு விதிகளை மீறியதால் தான், தற்போது சிக்கலை சந்தித்து வருகிறது இலங்கை கிரிக்கெட் வாரியம். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் படு மோசமான திறன் காரணமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது இலங்கை அணி.
- இதனை ஏற்க முடியாத இலங்கை அரசாங்கம், நேரடியாக களத்தில் குதித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து, அதை நிர்வகிக்க 7 பேர் கொண்ட குழுவையும் தற்காலிகமாக அமைத்தது.
- இதுகுறித்து ஐசிசியிடம் ஆலோசனை செய்யாமல், விதிகளுக்கு புறம்பாக குழு அமைக்கப்பட்டதால், ஐசிசி உறுப்பினர் விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை உறுப்பினர் உரிமத்தில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டது ஐசிசி.
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரராக ஒருவரை தேர்வு செய்து வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக் மற்றும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
- இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை ரச்சின் ரவீந்திரா வென்றுள்ளார். நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிரடியாக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா, தனது அறிமுக தொடரிலேயே 3 சதங்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதேபோல் ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹேலி மேத்யூஸ், வங்கதேசத்தின் நஹிடா அக்டர் மற்றும் நியூசிலாந்தின் அமெலியா கெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில், சிறந்த வீராங்கனைக்கான விருதை வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் வென்றுள்ளார்.
- வருடாந்திர கடற்படை கல்வி சங்க (என்இஎஸ்) மாநாடு - 2023 குஜராத்தில் அதன் தலைமையகம் உள்ள போர்பந்தரில் 2023 நவம்பர் 09 மற்றும் 10 தேதிகளில் நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் கடற்படைக் கல்விச் சங்கத்தின் தலைவர் வைஸ் அட்மிரல் திரு கிருஷ்ணா சுவாமிநாதன், துணைத் தலைவர் கமாடோர் திரு ஜி ராம்பாபு, மற்றும் நாடு முழுவதும் உள்ள கடற்படை பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிர்வாகக் குழு, மேலாண்மை ஆலோசனைக் குழு மற்றும் கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
- முதல் முறையாக, பல்வேறு கடற்படை நிலையங்களைச் சேர்ந்த கடற்படை மழலையர் பள்ளிகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.