Type Here to Get Search Results !

26th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


26th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

2023-24ம் ஆண்டின் மாநில முதலீட்டு நிதியாக தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி - ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல்
  • நிதிப்பகிர்வின் அடிப்படையில் ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் தரப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கீட்டு நிதியானது பிரித்து வழங்கப்படுகிறது.
  • அதன்படி 2023-24ம் ஆண்டின் நடப்பு நிதி ஆண்டிற்கான மூலதன முதலீட்டுக்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவி நிதி என்ற வகையில் தமிழகம், அருணாச்சல் பிரதேசம், பீகார், சண்டிகர், கோவா, குஜராத், அரியானா, இமாச்சல், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 16 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.56,415 கோடியை ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.4,079 கோடி தொகையை ஒதுக்கி ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த தொகையானது மாநிலத்திற்கான சுகாதாரம், கல்வி, நீர்பாசனம், நீர் வழங்கல், மின்சாரம், பாலங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என வழங்கப்பட்டுள்ள ஒப்புதலில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்திற்கு ரூ.9,640கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
என்ஏஎன்டிஐ (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்
  • என்ஏஎன்டிஐ (புதிய மருந்து மற்றும் தடுப்பூசி முறை) இணையதளத்தை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா புதுதில்லியில்  தொடங்கி வைத்தார்.
  • இந்த இணையதளம் மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் சுகம் இணையதளத்துடன் ஒருங்கிணைந்து கால்நடை உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்வதற்கும், வெளிப்படைத்தன்மையுடன் ஒழுங்குமுறை ஒப்புதல் அளிப்பதற்கும் தடையின்றி வழிவகுக்கும்.
இந்திய கடற்படையின் உள்நாட்டுத் தேவைகள் குறித்த உரையாடல் மாநாடு மற்றும் வர்த்தகக் கருத்தரங்கம்
  • இந்திய கடற்படையின் உள்நாட்டுத் தேவைகள் குறித்த உரையாடல் மாநாடு மற்றும் வர்த்தகக் கருத்தரங்கம்: தொழில்துறைக்கான வாய்ப்புகள் என்ற நிகழ்வை இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புடன் இணைந்து இந்திய கடற்படை 2023 ஜூன் 26 அன்று நடத்தியது.
  • பராமரிப்புத் தலைவர் துணை அட்மிரல் சந்தீப் நைதானி இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார்.
  • இந்த மாநாடு, இந்திய கடற்படை வீரர்களுடன் உரையாடுவதற்கு தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை , ஸ்டார்ட் அப் நிறுவனத்தாருக்கு சிறந்த வாய்ப்பை அளிதத்து. 
  • பாதுகாப்புத்துறையில் தன்னிறைவை அடையும் வகையில், இந்திய கடற்படையின் தேவைகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதற்கானத் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
  • நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் துறையினர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனத்தினர் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel