ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கடற்படையில் இணைந்தது
- சர்வதேச அளவில் அதிக நீர்மூழ்கி கப்பல்களை கொண்ட நாடாக சீனா முன்னணியில் உள்ளது. அந்த நாட்டின் கடற்படையில் 74 நீர்மூழ்கிகள் உள்ளன. அமெரிக்காவிடம் 69, ரஷ்யாவிடம் 66, ஜப்பான், தென்கொரியாவிடம் தலா 22 நீர்மூழ்கிகள் உள்ளன.
- ரூ.50,000 கோடி மதிப்பில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து ரூ.50,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
- இதன்படி பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டுமான தளத்தில் நீர்மூழ்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
- முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கல்வாரி கடந்த 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. கடந்த 2019-ல் ஐஎன்எஸ் காந்தேரி,கடந்த 2021-ம் ஆண்டில் ஐஎன்எஸ்கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகி யவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன.
- இந்த வரிசையில் ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. மும்பைகடற்படை தளத்தில் நடந்த விழாவில் கடற்படை தளபதி ஹரிகுமார் இந்த நீர்மூழ்கியை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
- சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள், பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி நேதாஜியின் 126-வது பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்பட்டது.
- இதையொட்டி, அந்தமான்-நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, 'பரம்வீர் சக்ரா' விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்.
- இதன்படி அந்த தீவுகளுக்கு ஜதுநாத் சிங், ராம் ரகோபா ராணே, கரம் சிங், சோம்நாத் சர்மா, ஜோகிந்தர் சிங்,தன்சிங் தாபா, குர்பச்சான் சிங், பிருசிங், ஆல்பர்ட், ஆர்திசிர், அப்துல் ஹமீது, ஷிதான் சிங், ராமசாமி பரமேஸ்வரன், நிர்மல்ஜித் சிங், அருண்,ஹோஷியார் சிங், மனோஜ் பாண்டே,விக்ரம் பத்ரா, பணா சிங், யோகேந்திர சிங், சஞ்சய் குமார் ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட்டன.
- அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார்.
- ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- ஆயுஷ் அமைச்சக இயக்குநர் டாக்டர் சஷி ரஞ்சன் வித்யார்தி, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் (வர்த்தக மற்றும் சந்தைப் பிரிவு) திரு பியூஸ் திவாரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்த ஒப்பந்தத்தின்படி, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில், மருத்துவச் சுற்றுலா குறித்து இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் பயிற்சி அளிக்கும்.