சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயதான ஷ்யாம் நேஹி காலமானார்
- நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக 1952 துவக்கத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. பனி மூட்டம், பலத்த மழை போன்ற மோசமான வானிலை காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன், 1951 இறுதியில் ஹிமாச்சல் மாநிலத்தில் தேர்தல் நடந்தது.
- இதில், முதல் ஓட்டைச் செலுத்திய பெருமைக்கு உரியவர் ஷ்யாம் சரண் நேஹி. ஹிமாச்சலின் கின்னாவூர் மாவட்டம் கல்பாவில், முதல் ஓட்டை செலுத்தியபோது அவருக்கு வயது 34.
- இதற்கு பின் இதுவரை நடந்த அனைத்து லோக்சபா, சட்டசபை மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களிலும் நேஹி, தவறாமல் தன் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார். இதுவரை 34 தேர்தல்களில் அவர் ஓட்டளித்துள்ளார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் விளம்பர துாதராகவும் நேஹி நியமிக்கப்பட்டார்.
- இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நேஹி, வயது மூப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
எகிப்தில் 27வது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு
- பருவநிலை மாற்ற மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. எகிப்தில் உள்ள ஷா்ம்-அல்-ஷேக் நகரில் நவ.6 முதல் நவ.8-ஆம் தேதி வரை 27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் 198 நாடுகள் பங்கேற்க உள்ளன.
- இதில் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு அனைவரும் இணைந்து எதிா்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்பட 100-க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.
- எனினும் மாநாட்டில் இந்தியா சாா்பில் பங்கேற்கும் குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமை தாங்க உள்ளாா்.
- மாநாட்டில் 'சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை' இயக்கத்தில் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.