Type Here to Get Search Results !

TNPSC 6th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'ஹைப்பர்சோனிக்' ஏவுகணை தயாரிக்க அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகள் முடிவு

  • பசிபிக் கடல் பகுதியில் சீன ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகள் இணைந்து 'ஆகஸ்' என்ற பாதுகாப்பு கூட்டணியை கடந்த ஆண்டு செப்டம்பரில் உருவாக்கின.
  • எந்தவொரு ஏவுகணை தடுப்பு ஆயுதத்தாலும் இடைமறிக்க முடியாத அளவுக்கு வேகமாக பாயக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் சீனா மற்றும் ரஷ்யா ஈடுபட்டு உள்ளன.
  • ரஷ்யா இந்த ஏவுகணை சோதனையில் கடந்த ஆண்டே ஈடுபட்டதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. 
  • இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய பாதுகாப்பு கூட்டணியான 'ஆகஸ்' அமைப்பு சார்பாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க மூன்று நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

மாநிலங்களவையிலும் நிறைவேறியது குற்றவியல் நடைமுறை சட்ட மசோதா

  • மக்களவைத் தொடர்ந்து மாநிலங்களவையில் குற்றவியல் நடைமுறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 
  • குற்றவியல் நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர் குறித்த பயோமெட்ரிக் எனும் உருவ அடையாளங்களை பதிவு செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
  • ஏற்கெனவே கடந்த திங்கள்கிழமை அன்று குற்றவியல் நடைமுறை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக சட்டமாக மாறுவதற்கான ஒப்புதல் கேட்டு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.14,000 கோடி முதலீட்டில் 48,000 மின்சார 'சார்ஜ்' மையம்

  • இந்தியாவில் பொது இடங்களில் 2,000த்திற்கும் குறைவாகவே மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் உள்ளன. வரும் 2024 - 25ம் நிதியாண்டில், மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை முறையே, 15 சதவீதம் மற்றும் 30 சதவீதம் அதிகரிக்கும்.மின்சார பஸ் போக்குவரத்து 8 - 10 சதவீதம் உயரும். 
  • அதற்கேற்ப மின் சார்ஜ் நிலையங்கள் அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு, 'பேம்' திட்டத்தின் கீழ், 1,300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 
  • இது தவிர ஏராளமான தனியார் நிறுவனங்கள் மின் வாகன சார்ஜ் மையங்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளன. அதன் அடிப்படையில் அடுத்த 3 - 4 ஆண்டுகளில் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 48 ஆயிரத்திற்கும் அதிகமான மின் வாகன சார்ஜ் மையங்கள் அமைய உள்ளன.
  • இதற்கான பெரும்பாலான சாதனங்கள், சீனா, தைவான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன. இவற்றை உள்நாட்டில் தயாரித்தால், சார்ஜ் நிலையங்களை அமைக்கும் செலவு குறையும்.

பட்டயக் கணக்காளர்கள், செலவுகள் மற்றும் பணி கணக்காளர்கள், அலுவலக செயலாளர்கள் சட்டத்திருத்த மசோதா, 2022 200-க்கும் மேற்பட்ட திருத்தங்ககளுடன் நிறைவேற்றப்பட்டது 

  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில், பட்டயக் கணக்காளர்கள், செலவுகள் மற்றும் பணி கணக்காளர்கள், அலுவலக செயலாளர்கள் சட்டத்திருத்த மசோதா, 2022-ஐ அறிமுகம் செய்தார். 
  • இதன் மீதான வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு கடந்த மார்ச் 30 ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா விவாதத்திற்கு வந்தது. 
  • மசோதா மீதான வாக்கெடுப்பின்போது, அதன் உட்பிரிவுகளை சுட்டிக்காட்டி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜாம் பிரிட்டாஸ் 163 திருத்தங்களை கொண்டு வந்து நோட்டீஸ் கொடுத்தார். 
  • அதாவது மசோதாவில் உள்ள பெரும்பாலான உட்பிரிவுகளில் திருத்தத்தை அவர் நாடினார். அவரைபோல் இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. பினோய் விஸ்வம் 20 உட்பிரிவுகளில் திருத்தம் கொண்டு வந்தார். இப்படி மொத்தம் 200-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மாநிலங்களவை உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டன. 
  • இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக குரல் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இறுதியாக பட்டயக் கணக்காளர்கள், செலவுகள் மற்றும் பணி கணக்காளர்கள், அலுவலக செயலாளர்கள் சட்டத்திருத்த மசோதா, 2022-ஐ நிறைவேற்றப்பட்டது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel