- மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள "நேஷனல் புக் டிரஸ்ட்' இந்தத் திட்டத்தை வரைமுறைகளின்படி செயல்படுத்தும் அமைப்பாக இருக்கும். இது முப்பது வயதுக்குட்ட இளம் தலைமுறையினருக்கான திட்டம். இதற்கு தேர்வு நடக்கும்.
- இதுவரை புத்தகத்தில் இடம்பெற்று தெரியவராத வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், அறியப்படாத இடங்கள், மறந்து போன இடங்கள், தேசிய இயக்கங்களில் பங்குபெற்றவர்கள் மற்றும் பல புதிய கண்டுபிடிப்புகள், புது உருவாக்கங்கள் ஆகிய தலைப்புகளில் புத்தகம் எழுதும் போட்டி நடத்தப்படும்.
- இந்திய பாரம்பரியம், கலாசாரம் மற்றும் அறிவு முறையை மேம்படுத்துவதும் முறையில் இவை எழுதப்படவேண்டும்.
- இதற்கான அகில இந்திய தேர்வு வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதிவரை நடத்தப்படும். இதில் 75 புத்தக எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதோடு ஆறு மாத காலத்திற்கு மாதம் ரூ. 50,000 உதவித்தொகையும் அளிக்கப்படும்.
- இந்த எழுத்தாளர்கள் பெயர் மற்றும் புத்தகங்கள் விவரங்கள் 2021 ஆகஸ்ட் 15 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் அவர்களது புத்தகங்கள் அச்சுக்கு அனுப்பப்படும். இந்த புத்தகங்கள் தேசிய இளைஞர்கள் தினமான ஜனவரி 12 (2022) அன்று வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவா திட்டம் / YUVA SCHEME
May 30, 2021
0