இந்தியாவுக்கு பைசர் ரூ.510 கோடி மதிப்பிலான மருத்துவ உதவி
- உலகின் முன்னணி பார்மா நிறுவனமான பைசர், இந்தியாவுக்கு கரோனா நிவாரண உதவியாக ரூ.510 கோடி மதிப்பிலான மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. இது பைசர் நிறுவன வரலாற்றில் வழங்கப்பட்ட மிகப்பெரிய நிவாரண முயற்சி என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் போர்லா கூறியுள்ளார்.
- அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பைசர் நிறுவனத்தின் விநியோக மையங்களிலிருந்து மருத்துவ உதவிகள் அனுப்பப்படுகின்றன.
- இந்த உதவிகள் நாடு முழுவதுமுள்ள பொது மருத்துவமனைகளில் மருந்து தேவைப்படுகிற கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சென்றடைய வேண்டும் என்பதுதான் பைசர் நிறுவனத்தின் திட்டம் என்றும் போர்லா கூறினார்.
- இந்திய அரசு மற்றும் என்ஜிஓ அமைப்புகளின் உதவியால் எங்கெல்லாம் மருந்துகளின் தேவை உள்ளது என்பதை அறிந்து விநியோகம் செய்யும் முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ள பாரத ஸ்டேட் வங்கி ரூ.71 கோடி ஒதுக்கீடு
- கரோனா தொற்றால் மோசமான பாதிப்புக்கு உள்ளான சில மாநிலங்களில் நோயாளிகளுக்குப் படுக்கைககள், தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க எஸ்பிஐ வங்கி ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளது.
- உயிா்காக்கும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கல், கொவைட்-19 பராமரிப்பு, நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கான அவசர ஊா்திகள், பாதுகாப்புக் கவசக் கருவிகள், முகக் கவசங்கள், உணவு நிவாரணம் போன்றவற்றுக்கு கூடுதல் தொகையாக ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மரபணு- வரிசைப்படுத்துதலில் அரசாங்கத்தின் முன் முயற்சிகளுக்குக் கூடுதலாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சமூக தேவைகளை நிவா்த்தி செய்வதற்காக ரூ.10 கோடி பங்குதாரா் மற்றும் சேவையில் இருக்கும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒத்துழைக்க ஒதுக்கப்படும்.
- நாடு முழுவதும் 22 ஆயிரம் கிளைகளைக் கொண்ட பாரத ஸ்டேட் வங்கி அதன் விரிவான நெட்வொக் மூலம் மக்களுக்கு தொடா்ந்து சேவையாற்றும்.