2020-ல் உலக நாடுகளின் ராணுவ செலவினம் தொடர்பான அறிக்கை
- ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 'ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்' உள்ளது. உலகளாவிய ராணுவ செலவினம் மற்றும் ஆயுத வர்த்தகத்தை இந்த நிறுவனம் கண்காணித்து வருகிறது. உலக நாடுகளின் ராணுவ செலவினம் தொடர்பான இதன் சமீபத்திய அறிக்கை வெளியானது.
- இதன்படி கடந்த 2020-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ செலவில் அமெரிக்காவின் பங்கு 39 சதவீதமாக உள்ளது.
- இதையடுத்து சீனாவின் பங்கு 13 சதவீதமாகவும் இந்தியாவின் பங்கு 3.7 சதவீதமாகவும் உள்ளது. அமெரிக்கா தனது ராணுவத்துக்கு கடந்த 2020-ல் 77,800 கோடிடாலர் செலவிட்டுள்ளது. சீனா 25,200 கோடி டாலரும் இந்தியா 7,290 கோடி டாலரும் செலவிட்டுள்ளன.
- கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா வைரஸ் பரவல் இருந்தாலும் இந்த 3 நாடுகளும் முந்தையை ஆண்டை விட கூடுதலாக ராணுவத்துக்கு செலவிட்டுள்ளன. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.7 சதவீதத்தை ராணுவத்துக்கு செலவிட்டுள்ளது. சீனா 1.7 சதவீதமும் இந்தியா 2.9 சதவீதமும் செலவிட்டுள்ளன.
- 2011 முதல் 2020 வரை அமெரிக்க ராணுவ செலவு 10 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் சீனாவின் ராணுவ செலவு 76 சதவீதமும் இந்தியாவின் ராணுவ செலவு 34 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
- உலகில் ராணுவத்துக்கு அதிகம்செலவிட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
- 2020-ல் உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவு முந்தைய ஆண்டை விட 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் 5 நாடுகளின் ராணுவ செலவு, மொத்த ராணுவ செலவில் 62 சதவீதமாக உள்ளது.
பிரிட்டனுடனான வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்
- பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுடன் மேற்கொள்ளபடவிருக்கும் வா்த்த மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து அந்த நாட்டுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
- அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 660 எம்.பி.க்கள் வாக்களித்தனா். ஒப்பந்தத்தை எதிா்த்து 5 போ வாக்களித்திருந்தனா்; 32 போ வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
- இதன் மூலம், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
- தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற்றதைத் தொடா்ந்து, பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியாவுக்கு கனடா ரூ. 74 கோடி உதவி
- கனடாவின் செஞ்சிலுவை சங்கம் மூலம் இந்திய செஞ்சிலுவை சங்கத்துக்கு கனடா அரசு ரூ. 74 கோடியை வழங்கத் தயாராக உள்ளது. இதன்மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கலாம். இந்தியாவுக்கு பலா் நிதி உதவி அளிக்க விரும்பினால் செஞ்சிலுவை மூலமாக அளிக்கலாம்.
- இதேபோல், நியூஸிலாந்தும் இந்தியாவுக்கு ரூ. 53 கோடியை செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவாக்கிகள் வாங்கவும், மேலும் 500 ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கவும் முடிவு: பிரதமர் மோடி உத்தரவு
- ''நாட்டில் தேவைப்படும் இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள அமைக்கவும், போர்ட்டபிள் ஆக்சிஜன் செறிவாக்கிகள் (Portable Oxygen Concentrator) வாங்கவும் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவாக்கிகளை விரைவாகக் கொள்முதல் செய்து, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
- ஏற்கெனவே பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து 713 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இப்போது மேலும் 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்
ஐபிஓ மூலம் 8250 கோடி ரூபாய் திரட்டிய சொமேட்டோ நிறுவனம்
- ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவினை டெலிவரை செய்து வருகிறது சொமேட்டோ நிறுவனம். கடந்த 2008இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 24 நாடுகளில் இயங்கி வருகிறது.
- சுமார் 5000 ஊழியர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மக்களிடம் அறிவிப்பு வெளியிட்டு தொழிலுக்கு திரட்டப்படும் நிதியான IPO மூலம் 8250 கோடி ரூபாய் திரட்டியதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்
- மகாராஷ்டிர மாநிலத்தின் அமைச்சர்வைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- மேலும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்த மாநில அரசின் முடிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- முன்னதாக கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், தில்லி, உத்தரகண்ட் உள்ளிட்ட 20 மாநில அரசுகள் இலவச கரோனா தடுப்பூசியை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தேஜஸ் போர் விமானத்தில் 'பைத்தான்-5' ஏவுகணை இணைப்பு
- உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போா் விமானத்தில் ஏற்கெனவே 'டொபி' ஏவுகணை இணைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், பாா்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்கையும் மிக வேகமாகச் சென்று துல்லியமாகத் தாக்கியது.
- அதனைத் தொடா்ந்து ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பைத்தான்-5 ஏவுகணையும் அதில் இணைக்கப்பட்டு கோவாவில் பரிசோதிக்கப்பட்டது.
- மிகவும் கடினமான சூழல்களை எதிா்கொள்ளக் கூடிய வகையில் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், தேஜஸ் போா் விமானம் வானிலிருந்தபடி அனைத்து இலக்குகளையும் 100 சதவீதம் துல்லியமாக வான் இலக்கை தாக்கி அழித்தது. அதனடிப்படையில், பைத்தான்-5 ஏவுகணையும் தேஜஸ் விமானத்தில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கோவாவில் நடத்தப்பட்ட இந்தப் பரிசோதனைக்கு முன்பாக, போா் விமானம் பைத்தான்-5 ஏவுகணையை தாங்கிச் செல்லும் திறன்குறித்து பெங்களூரில் சோதனை செய்யப்பட்டது.
முதுமக்கள் தாழிகளிலிருந்து பானைகள் கண்டெடுப்பு
- கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வுப் பணிகள் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
- அப்போது கொந்தகையில் 3 குழிகள் தோண்டப்பட்டு 7 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 3 மற்றும் 4 ஆம் எண் கொண்ட முதுமக்கள் தாழிகளில் இருந்த பொருள்கள் ஆய்வுக்காக வெளியே எடுக்கப்பட்டன.
- 3 ஆம் எண் கொண்ட தாழி முழுமையாக கிடைத்ததால் அதற்குள் மனித எலும்புகள், பானைகள் மற்றும் இரும்பு ஆயுதம் உள்ளிட்டவை இருந்தன.
- இதில் சிறிய வடிவிலான பானைகளில் ஒரே மாதிரியான குறியீடுகள் காணப்படுகின்றன. இது உணவுப் பாத்திரம் அல்லது குவளையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
- 19 செ.மீ. விட்டமுள்ள ஒரு உணவுப் பாத்திரத்தின் உயரம் 4.5 செ. மீட்டர் உள்ளது. மற்றொரு பாத்திரம் 14 செ.மீ. விட்டமும், 16 செ.மீ. உயரமும் உள்ளது. மற்றொரு பாத்திரம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
- மூன்று குறியீடுகளும் எதனைக் குறிக்கிறது என்பது குறித்து அடுத்த கட்ட ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும்.