Type Here to Get Search Results !

TNPSC 27th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஜவ்வாதுமலை அருகே பழமையான குத்துக்கல் கண்டெடுப்பு

  • ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் அடுத்த சாளுர் கிராமம் மாரியம்மன் கோயில் எதிரே குத்துக்கல் உள்ளது. இது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். 10 அடி உயரமும், 5 அடி அகலம் கொண்டது.
  • முற்காலத்தில் உயிரிழந்தவர் களை புதைக்க, பல வடிவ கற்களை அடுக்கி கல்லறை அமைத்தனர். மேலும், குழுத் தலைவர் அல்லது சிற்றரசன் உயிரிழந்தால், அவர்களை புதைத்த குழியின் மீது குத்துக்கல் நடும் வழக்கம் இருந்துள்ளது. 
  • இந்த குத்துக்கல்லை யானைக் கட்டி கல் என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில் சிற்றரசன் இருந்ததாகவும், குத்துக்கல்லில் யானை கட்டி வைத்திருந்ததாகவும் கூறுகின்றனர்.
  • இதேபோல், அத்திப்பட்டு எனும் கிராமத்தில் 3 குத்துக்கல் அருகருகே உள்ளன. ஜவ்வாது மலையில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் காணப்படும் நிலையில், குத்துக்கல்லும் அதிகளவில் காணப்படுவது ஜவ்வாதுமலையின் தொன்மைக்கு வலு சேர்க்கிறது.
  • இந்த மலையில் கல்திட்டைகள், கற்கோடாரிகள், தொழில் கூடங்கள் என வரலாற்று தடயங்கள் உள்ளன. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வரலாற்று சிறப்புகளை வெளிக்கொண்டு வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் மத்திய அரசிடம் ஒப்படைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் தமிழகத்துக்கு அளித்து உபரியை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஆக்சிஜனை முழுமையாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்பதற்காக 4 மாதங்களுக்கு செயல்பட அனுமதிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 
இந்தியப் பெண் விஞ்ஞானிக்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு விருது
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக சா்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து 'வைல்ட் எலமண்ட்ஸ் ஃபவுண்டேஷன்' அமைப்பு செயல்பட்டு வருகிறது. 
  • மனித உலகம், தாவர உலகம், விலங்குகள் உலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாதுகாப்பதற்கு இந்த அமைப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
  • அந்த அமைப்பு கிரிதி கரந்துக்கு 'வன புத்தாக்க விஞ்ஞானி' விருதை வழங்கியுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண் கிரிதி கரந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பெங்களூரைச் சோந்த உயிரியல் விஞ்ஞானியான கிரிதி கரந்த், வனப் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் உள்ளாா்.
  • அமெரிக்கா, பிரிட்டன், கென்யா, கொலம்பியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சோந்த விஞ்ஞானிகள் சிலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுபவா்களுக்கு ஆராய்ச்சிப் பணிகளுக்காக 2 ஆண்டுகளுக்கு ரூ.75 லட்சத்தை அந்த அமைப்பு வழங்கவுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel