Type Here to Get Search Results !

TNPSC 26th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வில்வித்தையில் தங்கம் வென்றது இந்திய ஜோடி

  • கவுதமாலாவில் நடைபெற்ற உலகக் கோப்பை முதற்கட்ட தொடரில் மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 27-26 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்த பிரிவில் இந்திய அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தங்கம் வென்றுள்ளது.
  • கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அட்டானு தாஸ், அங்கிதா பகத் ஜோடி 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.
  • மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் மெக்கன்ஸிஸி பிரவுனை எதிர்த்து விளையாடினார். இதில் தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். உலகக் கோப்பை போட்டியில் தீபிகா குமாரி தங்கம் வெல்வது இது 3-வது முறையாகும்.
  • ஆடவருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் தீபிகா குமாரியின் கணவரான அட்டானு தாஸ் இறுதிச் சுற்றில் 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டேனியல் காஸ்ட்ரோவை வீழ்த்தி தங்கம் வென்றார். உலகக் கோப்பை தொடரில் அட்டானு தாஸ் வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். 
  • மேலும் ரீகர்வ் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியா 2009ம் ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் பதக்கம் வென்றுள்ளது. அதேவேளையில் உலகக் கோப்பை தொடரில் தனிநபர் பிரிவில் 2 தங்கம் மற்றும் அணிகள் பிரிவில் ஒரு தங்கம் இந்தியா வெல்வதும் இதுவே முதன்முறையாகும்.
  • உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா 3 தங்கம், 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவுக்கு கூகுள் 135 கோடி நிதியுதவி

  • கொரோனா 2வது அலையால் பாதித்துள்ள இந்தியாவுக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதியுதவி அறிவிக்க தொடங்கி உள்ளன. கூகுள் நிறுவனம் நேற்று ரூ.135 கோடி நிதியுதவியை அறிவித்தது. 
  • 'கிவ் இந்தியா அமைப்பும், யுனிசெப் நிறுவனமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெருக்கடியால் சிக்கி தவிக்கும் குடும்பங்களுக்கு, கூகுள் நிறுவனத்தின் நிதியுதவியை பயன்படுத்தி உதவிகள் வழங்கும். 
  • மேலும், கொரோனா பரிசோதனை உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வாங்கித் தரவும் இதை பயன்படுத்தும்.
4 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது ஸ்பேஸ்-எக்ஸ்
  • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு அமைப்புடன் இணைந்து, 4 வீரர்களை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளிக்கு அனுப்பியது. 
  • ஏப்ரல் 23 அன்று 3வது முறையாக பூமிக்கு சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நான்கு பேரை அனுப்புகிறது ஸ்பேஸ்-எக்ஸ். அவர்களில் 2 பேர் அமெரிக்காவையும், ஒருவர் ஜப்பானையும், மற்றொருவர் பிரான்ஸ் நாட்டையும் சேர்ந்தவர்கள். 
  • ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட விண்வெளி ஓடத்தை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, அதில் மனிதர்கள் மீண்டும் விண்வெளிக்கு அனுப்பப்படுவது இதுவே முதல்முறையாகும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel