ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது இந்தியா
- புனேயில் பகலிரவாக நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- 330 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது.
- இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் வென்று கோப்பையை வென்றது இந்திய அணி. ஏற்கெனவே டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-3 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்றிருந்தது. இந்நிலையில் அனைத்துப்பிரிவுகளிலும் வென்று இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.
- இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ந்து 6-வது ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுகிறது. இதுவரை இந்தியாவில் 10 ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்து அணி விளையாடியுள்ளது, அதில் இந்திய அணி 7-வது தொடரை கைப்பற்றியுள்ளது.
- தொடர்நாயகன் விருது இங்கிலாந்து அணி வீரர் பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது. முதல் ஆட்டத்தில் 96, 2-வது ஆட்டத்தில் சதம் என அடித்து நொறுக்கிய பேர்ஸ்டோவுக்கு தொடர்நாயகன் விருது அளிக்கப்பட்டது.
உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் டிரேப் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங்கம்
- ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் டிரேப் குழு போட்டிகளில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது.
- பைனலில் கஜகஸ்தான் அணியுடன் மோதிய பிரித்விராஜ் தொண்டைமான், லக்ஷய் ஷியோரன், கைனன் செனாய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி 6-4 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.
- மகளிர் டிரேப் குழு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ராஜேஷ்வரி குமாரி, மனிஷா கீர், ஷ்ரேயாசி சிங் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு முதலிடம் பிடித்தனர்.
- உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 15 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை அள்ளி முதலிடம் பிடித்தது.
- அமெரிக்கா 4 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது. இத்தாலி (2-0-2), டென்மார்க் (2-0-1), போலந்து (1-3-3) அணிகள் டாப்-5ல் இடம் பிடித்தன.