இந்தியா வங்க தேசம் இடையே 5 ஒப்பந்தம் கையெழுத்து
- வங்க தேச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவாக இரு நாடுகளுக்கு இடையே சுகாதாரம், வர்த்தகம், எரிசக்தி, வளர்ச்சி ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
- மேலும் மனிதாபிமான முயற்சியாக வங்கதேசத்துக்கு 109 ஆம்புலன்ஸுகளுக்கான சாவியையும், 1.2 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கான அடையாளப்பெட்டியையும் ஷேக் ஹசீனாவிடம் பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் மோடி-ஹசீனா இணைந்து இந்தியா, வங்கதேசம் இடையே புதிய பயணிகள் ரயிலை தொடங்கி வைத்தனர்.
- இந்த ரயில் வங்கதேச தலைநகர் தாகாவிலிருந்து மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி வரை இயக்கப்படும். ஏற்கனவே இந்தியா, வங்கதேசம் இடையே மைடிரீ எக்ஸ்பிரஸ் (தாகா-கொல்கத்தா), பந்தன் எக்ஸ்பிரஸ் (குல்னா-கொல்கத்தா) ஆகிய 2 பயணிகள் ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- கடைகளில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிஐஎஸ் தரச்சான்றிதழை கட்டாய மாகப் பெற வேண்டும் என்று இந்திய உண வுப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டுள்ளது
- 2008ஆம் ஆண்டின் உண வுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் உரிய உரிமமும் பதிவும் பெற்றே தங்களது நடவடிக்கைக ளைத் தொடங்க வேண்டும்.
- அத்துடன், 2011-ஆம் ஆண்டில் அறிமு கப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி, இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (பிஐ எஸ்) சான்றிதழைப் பெறாமல் எந்த நிறுவனமும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்களை விற்பனை செய்யக் கூடாது.
- எனினும், எஃப்எஸ்எஸ்ஏஐ சான்றிதழை மட்டுமே பெற்றுக் கொண்டு ஏராளமான நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத் தயாரித்து விற்பனை செய்து வருவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன
- எனவே, குடிநீர் தயாரிப்பதற்கான எஃப் எஸ்எஸ்ஏஐ சான்றிதழைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், பிஐஎஸ் தரச்சான்றிதழை கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும்.
- தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடைபெற்ற 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் விஜய்வீர் சித்து தேஜஸ்வினி ஜோடி 9-1 என்ற புள்ளிகள் கணக்கில் சகநாட்டவரான குருபிரீத் சிங் அசோக் பாட்டீல் ஜோடியை வீழ்த்தியது
- உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி யில் 25 மீ. ரேபிட்ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் விஜய்வீர் சித்து-தேஜஸ்வினி ஜோடி தங்கம் வென்றது.
- தகுதிச்சுற்றில் குருபிரீத் சிங்-அசோக் பாட்டீல் ஜோடி 370 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தபோதிலும், இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது
- இதேபிரிவில் வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் கியான் செனாய்-ஷ்ரேயஸி சிங் ஜோடி 35-38 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்கியின் சஃபி சாரிடர்க்-யாவுஸ் இல்னாம் ஜோடியிடம் தோல்வி கண்டது
- தற்போதைய நிலையில், இந்தியா 13 தங்கம், 8 வெள்ளி, 6 வெண் கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தப் போட்டியில் 53 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்