Type Here to Get Search Results !

TNPSC 26th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஐ.நா அமைதிக் குழுவுக்கு 2 லட்சம் டோஸ் கொரோனா இந்தியா தடுப்பூசிகள்

  • 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசிகள், நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு, பல நாடுகளுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. 
  • இதுவரை, 70 நாடுகளுக்கு, ஆறு கோடி டோஸ், கொரோனா தடுப்பூசிகளை, இந்திய அரசு வழங்கியுள்ளது. ஐ.நா.,வின் அமைதிக் குழுவுக்கு, இரண்டு லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பரிசாக வழங்க உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 
  • சமீபத்தில் அறிவித்தார்.உலகம் முழுவதிலும் இருந்து, 121 நாடுகளைச் சேர்ந்த, 85 ஆயிரத்து, 782 பேர், ஐ.நா., அமைதிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இவர்களுக்காக, இரண்டு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, இந்திய அரசு அனுப்பிவைக்கிறது.
வங்கதேச சுதந்திர தின பொன் விழா 2021
  • பாகிஸ்தானிலிருந்து பிரிந்து, 1971ல், வங்கதேசம் தனி நாடாக உருவானது. இதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உள்ளது. இந்திய ராணுவத் தின் உதவியுடன் தான், வங்கதேசம் உருவானது.
  • ஆண்டுதோறும், வங்கதேசத்தின் சுதந்திர தின விழா, மார்ச் 26ல்,தேசிய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. வங்கதேசம் தனி நாடாக உருவாகி, 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு, சுதந்திர தின பொன் விழாவை சிறப்பாக கொண்டாட, அந்த நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
  • இதையொட்டி, தலைநகர் தாகாவில் நடக்கும் விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். இதை, பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். 
  • கொரோனா பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் 25ல், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், பிரதமர் மோடி, எந்த வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ஒரு ஆண்டுக்குப் பின், முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசத்துக்கு சென்றார்.
  • ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் செல்வதற்காக, மத்திய அரசு சார்பில், 'போயிங் 777' விமானம், சமீபத்தில் வாங்கப்பட்டது. இந்த விமானத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக, வங்கதேசத்துக்கு சென்றார்
  • தாகா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வரவேற்றார். அந்நாட்டு தேசிய கீதம் முழக்கத்துடன், பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
  • தாகாவில் நடந்த சுந்திர தின பொன் விழா மற்றும் வங்கதேச தந்தை முஜிபுர் ரஹ்மானின் நுாற்றாண்டு விழாவில், ஷேக் ஹசீனாவுடன், பிரதமர் மோடி பங்கேற்றார். 
  • விழாவில், வங்கபந்து தேசிய அருங்காட்சியகத்தை, ஹசீனாவுடன் இணைந்து, பிரதமர் மோடி திறந்து வைத்தார். 
பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்பு கூட்டணி
  • பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்பு கூட்டணியனது (Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)  நாடுகள், ஐ.நா. முகமைகள், பலதரப்பு வளர்ச்சி வங்கிகள், தனியார் துறை மற்றும் கல்வியாளர்களின் ஓர் உலகளாவிய தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. 
  • இது பேரிடர் நெகிழ்திறன்மிக்க கூட்டணியாகும். 23 செப்டம்பர் 2019-ல் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயர் வளிமண்டல ஆய்வுக்காக இஸ்ரோவின் "சவுண்டிங் ராக்கெட்”
  • உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா தொடர்பான ஆய்வுக்காக இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக ஏவப்பட்டது 
  • சிறிய ரக ஆய்வு சாதனங்களை புவியின் தாழ்ந்த "சவுண்டிங் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தவும், வளிமண்டலம் அயனிகள் ராக்கெட்” தொடர்பான விண்வெளி ஆய்வுக்கும் சவுண்டிங் ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன 
  • இஸ்ரோவிடம் ஆர்எச்-200, ஆர்எச்-300, ஆர்எச்-560 என 3 விதமான சவுண்டிங் ராக்கெட்கள் உள்ளன. இது 2 நிலைகளைக் கொண்டது. இவற்றின் மூலம் 100 கிலோ வரையிலான ஆய்வுக் கருவிகளை அதிகபட்சம் 475 கி.மீ தூரம் கொண்ட புவியின் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்த முடியும். 
  • அதன்படி கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் இதுவரை இஸ்ரோ சார்பில் 100க்கும் மேற்பட்ட சவுண்டிங் ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டடுள்ளன. அந்த வரிசையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ சார்பில் ஆர்எச்-560 (RH-560) ரக சவுண்டிங் ராக்கெட் கடந்த மார்ச் 12-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel