Type Here to Get Search Results !

TNPSC 6th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை உருவானது நாட்டின் 51-வது புலிகள் காப்பகம்

  • தமிழகத்தில் ஏற்கனவே களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகியவை புலிகள் காப்பகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை வனப்பகுதிகளையும் புலிகள் சரணாலயங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக, கடந்த 7 ஆண்டுகளாக தகவல்களும், ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு வந்தன. 
  • இரண்டு சரணாலயங்களிலும் புலிகளின் காலடித் தடங்கள் முதல் மரபணு ஆராய்ச்சி வரை பல்வேறு ஆதாரங்கள் தொகுக்கப்பட்டன. இங்கு 3 ஆண் புலிகளும், 11 பெண் புலிகளுமாக மொத்தம் 14 புலிகள் வசிப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
  • புலிகளுக்கு இரையாக புள்ளிமான்கள், காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பாலூட்டிகளும் அதிக எண்ணிக்கையில் இருப்பதும், புலிகள் சரணாலயமாக அமைப்பதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.
  • இவற்றை ஆய்வு செய்த பிறகு கடந்த ஜனவரி 7ம் தேதியன்று இது குறித்த கடிதத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியது. ஜனவரி 22ம் தேதியில் தொழில்நுட்பக்குழு ஆலோசனையும் நடைபெற்றது. தொடர்ந்து தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை சரணாலயங்களை புலிகள் காப்பகமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 
  • மேகமலை வனவிலங்குகள் சரணாலயம் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு விரிந்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் அணில்கள் சரணாலயமானது கேரளாவின் முல்லை பெரியாறு பகுதி வரையிலும் அமைந்துள்ளது.
  • தற்போது தமிழகத்தின் ஐந்தாம் புலிகள் சரணாலயமாகவும், இந்தியாவின் 51-வது புலிகள் சரணாலயமாகவும் ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை சரணாலயங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு லட்சம் ஹெக்டேர் பகுதி, 63 வகையான பாலூட்டிகள், 323 வகை பறவையினங்கள் பாதுகாக்கப்படும்.
  • கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு அருணாசாலப்பிரதேசத்தின் காம்லாங் பகுதி புலிகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது.
கருக்கலைப்பு இந்திய அளவில் தமிழகம் 2வது இடம் & குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் முதலிடம்
  • கொரோனா பரவலை தடுக்க 2020ம் ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் கருத்தடை சாதனம் மற்றும் கருத்தடை மாத்திரைகள் அதிகம் விற்பனையாகி உள்ளதாக தற்போது ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. 
  • குறிப்பாக, 'காண்டம்' விற்பனை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் இணையதளம் ஒன்று நடத்திய ஆய்வில் பெரு நகரங்களில் 'காண்டம்' விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
  • சென்னையில் அது 5 மடங்காக அதிகரித்துள்ளது. இரவை விட பகலில்தான் அதிகளவு விற்பனையாகியுள்ளது. இதேபோல், கருத்தரிப்பை கண்டுபிடிக்கும் கருவிகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. 
  • இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் அதிக கருத்தடை சிகிச்சை நடந்த மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதன்படி இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் 7,86,309 பெண்கள் கருத்தடை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். 
  • தமிழகத்தில் அதிகபட்சமாக 1,06,325 பெண்கள் கருத்தடை சிகிச்சை செய்துள்ளனர். இதை தவிர்த்து அதிக கருக்கலைப்புகள் (Terminated Pregnancy) நடந்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. 
  • இதன்படி நாடு முழுவதும் 2,85,867 கருக்கலைப்புகள் நடந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 42,758 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் நாடு முழுவதும் 1,53,87,123 கர்ப்பிணிகள் பதிவு செய்துள்ளனர்.
  • தமிழகத்தில் மட்டும் 6,45,552 கர்ப்பிணிகள் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 1,05,01,319 பிறப்புகள் பதிவாகி உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 5,09,695 பிறப்புகள் பதிவாகி உள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel