12,000 ஒருநாள் ரன்கள் சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
- ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 300 ஒருநாள் இன்னிங்ஸில் (309-வது ஒருநாள் ஆட்டம்) 12,000 ரன்களை விரைவாக எடுத்து சாதனை செய்திருந்தார். அதை கோலி இன்று முறியடித்துள்ளார். 12,000 ரன்களைக் கடக்க கோலிக்கு 242 இன்னிங்ஸ் (251-வது ஒருநாள் ஆட்டம்) மட்டுமே தேவைப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில அரசு சார்பில் சிறந்த திரைப்பட விருது
- ஆண்டு தோறும் இந்தியத் திரைப்பட விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநில அரசு சார்பில் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
- அந்தவகையில் 2019ஆம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழா எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறுகிறது.
- இந்த விழாவின் சிறந்த படத்திற்கான விருது, 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார். மேலும் புதுச்சேரி அரசின் சார்பாக 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது.
- அமெரிக்காவில் உள்ள சர்வதேச தொழில்முறை பாதுகாப்பு சங்கமாக உலக பாதுகாப்பு அமைப்பு (டபிள்யுஎஸ்ஓ) செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு தர நிலைகளை சிறப்பாக கடைபிடித்து பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனத்துக்கு இந்த அமைப்பு சார்பில் சர்வதேச விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
- இதில், ஆண்டுதோறும் 6 நிறுவனங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்கான விருதை இந்தியாவில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுள்ளது.
- முன்மாதிரியான பாதுகாப்பு தரங்களை உறுதி செய்தல்,பாதுகாப்பு பதிவுகளை திறம்பட பராமரித்தல், மக்கள், உடைமை, வளங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து பொறியாளர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துதல் உள்ளிட்டவை அடிப்படையில் இந்த விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் 700 மெகாவாட் நீா் மின் திட்டப்பணிகளைத் தொடங்க சீனாவுடன் ஒப்பந்தம்
- சீனாவின் கெஜௌபா குழுமமும், பாகிஸ்தானைச் சோந்த லாராய்ப் குழுமமும் இணைந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாதனோடி மாவட்டத்தில் பாயும் ஜீலம் நதிநீரைப் பயன்படுத்தி 'ஆஸாத் பட்டான் நீா்மின் திட்டம்' என்ற பெயரில் புதிய நீா்மின் திட்டத்தை 1.35 பில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ. 9.09 ஆயிரம் கோடி) செலவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்கான கடன் தொகையை கடன் வழங்குநா்களின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சீனா மேம்பாட்டு வங்கி, சீன கட்டுமான வங்கி, தொழில்துறை மற்றும் வணிக வங்கி, சீன வங்கி ஆகியவை வழங்க உள்ளன.
- இத்திட்டத்துக்கான ஒப்பந்தத்திலும், மின் சக்தியை உற்பத்தி செய்வதற்கான நீா் பயன்பாட்டு கட்டண ஒப்பந்தத்திலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மின்துறை செயலா் ஜாபா் மெஹ்மூத் கானும், ஆசாத் பட்டான் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரியுமான லி சியோட்டாவும் கையெழுத்திட்டனா்.
- பலுசிஸ்தானில் உள்ள குவாடா் துறைமுகத்தை, சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்துடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை (சிபிஈசி) திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஏற்கெனவே சீன அரசு 62 பில்லியன்அமெரிக்க டாலா் (சுமாா் ரூ. 4.57 லட்சம் கோடி) நிதி உதவி செய்திருந்தது.