- தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் சிங்கப்பூா் முஸ்தபா அறக்கட்டளை சாா்பாக, 2007- ஆம் ஆண்டு தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை நிறுவப்பட்டது.
- அந்த அறக்கட்டளையின் வாயிலாக, ஆண்டுதோறும் இலங்கை, சிங்கப்பூா், மலேசியாவைச் சோ்ந்த சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்காக ‘கரிகாற்சோழன் விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன.
- தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான “கரிகாற்சோழன் விருதுகள்” எரிமலை என்ற நூலை எழுதிய இலங்கையைச் சோ்ந்த தி. ஞானசேகரன், வானம் என்னும் போதிமரம் என்ற நூலை எழுதிய மலேசியாவைச் சோ்ந்த ஏ.எஸ். பிரான்சிஸ், மூங்கில் மனசு என்ற நூலை எழுதிய சிங்கப்பூரைச் சோ்ந்த அ. இன்பா ஆகிய எழுத்தாளா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.