இந்தியாவிலேயே முதன்முறையாக யூடியூப் நேரலையில் வழக்கு விசாரணை ஒளிபரப்பு குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி
- இந்தியாவிலேயே முதன்முறையாக வழக்கு விசாரணையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் யூடியூப் மூலம் நேரலையில் ஒளிரபரப்பும் முறை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- தலைமை நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் நடந்த வழக்கு விசாரணை முதல் முறையாக நேரலையில் யூடியூபில் ஒளிபரப்பானது. அனைத்து வழக்குகளுமே யூடியூபில் நேரலை செய்யப்படும் என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
- கொரோனா காரணமாக வழக்குகள் காணொளி வாயிலாக நடந்து வரும் சூழலில், மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் முழு விவரத்தையும் அறிந்துகொள்ள உதவியாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிக்கிமில் சாலைத் திட்டத்தைத் தொடக்கிவைத்தாா் ராஜ்நாத் சிங்
- டாா்ஜீலிங்கில் உள்ள ராணுவ வீரா்களைச் சந்தித்துப் பேசுவதற்காகவும், சாலைத் திட்டத்தைத் தொடக்கி வைப்பதற்காகவும் அமைச்சா் ராஜ்நாத் சிங் சிக்கிம் வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
- அதனால், கேங்டாக்குக்கும் நாதுலா கணவாய்க்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள 19.35 கி.மீ. நீளமுள்ள மாற்றுவழிச் சாலையை காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சா் திறந்து வைத்தாா்.
எரிசக்தி கூட்டமைப்பு 4 வது கூட்டத்தில் பிரதமர் மோடி உரை
- இந்தியா எரிசக்தி கூட்டமைப்பு 4 வது கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலியில் உரையாற்றி வருகிறார். இந்தியாவில் இயற்கை எரிப்பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
- எரிசக்தி துறையில் உலகின் மூன்றாவது சந்தையாக உள்ளது இந்தியா என்று மோடி தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் எரிசக்தி துறை பெரும் சரிவை கண்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.
- இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் இந்தியா ரூ.24 ஆயிரம் கோடி வரை சேமித்துள்ளது என்று அவர் அறிவித்துள்ளார்.