போக்குவரத்து கழக சொத்துகள் புனரமைப்பு தேசிய கட்டிட கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம்
- மாநில போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான சொத்துகளை புனரமைக்க மத்திய அரசின் தேசிய கட்டிட கட்டுமான நிறுவனத்துடன் (என்பிசிசி) ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியுள்ளார்.
- மாநில போக்குவரத்து நிறுவனத்தில் பொது போக்குவரத்துக்காக 3,800 பஸ் உள்ளது. இந்த பஸ்களை பராமரிக்க இரண்டு பணிமனைகளும், 18 முனையங்களும், 36 டெப்போக்களும் உள்ளன.
- அது மட்டுமன்றி போக்குவரத்து துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு என 3 குடியிருப்பு காலனிகளும் உள்ளது. பஸ் டிக்கெட் வசூல், டெப்போக்களிலும், முனையங்களிலும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு போக மிஞ்சிய இடங்கள் வங்கிகள், மதர் டெய்ரி பால் பூத், செல்போன் டவர் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டும், விளம்பர பலகைகள் வைப்பதற்கு வாடகை வசூல் என்ற வகையிலும் போக்குவரத்து துறைக்கு வருவாய் ஈட்டப்படுகிறது.
கிழக்கு சிக்கிமில் 19.85 கி.மீ சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்
- சிக்கிமின் கிழக்கில் தேசிய நெடுஞ்சாலை 310-த்தின் தொடக்கத்தில் இருந்து 19.350 கி.மீ வரை 19.85 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மாற்று சீரமைப்பு சாலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்பணித்தார்.
- இந்த பாதையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலை இயற்கை பேரழிவுகளால் சேதம் அடைந்ததால், சீரமைக்க வேண்டிய தேவை எழுந்தது.
- பொதுவாக சிக்கின் கிழக்குப் பகுதி மொத்தத்துக்கும், குறிப்பாக நதுல்லா பகுதியில் பாதுகாப்பு தொடர்பாக தயார் நிலையை மேம்படுத்துவதற்கான முக்கியமான இணைப்பாகவும் இந்த சாலை திகழ்கிறது.
- இந்த நிகழ்வில் குழுமியிருந்தவர்கள் மத்தியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உகந்த செலவில், உரிய நேரத்தில் சிறந்த தரமான உள்கட்டமைப்புடன், உறுதியான அர்ப்பணிப்புடன் சாலையை அமைத்த எல்லை சாலைகள் அமைப்புக்கு பாராட்டுத் தெரிவித்தார்.