இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்க தலைவராக சீமா முஸ்தபா தேர்வு
- நாட்டிலுள்ள பத்திரிகை ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாக இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக இருந்த 'தி பிரின்ட்' செய்தி இணையதள ஆசிரியர், சேகர் குப்தாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி இணையவழியில் தேர்தல் நடைபெற்றது.
- இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. அதில் 'தி சிட்டிசன்' ஆசிரியர் சீமா முஸ்தபா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 'ஹார்ட்நியூஸ்' ஆசிரியர் சஞ்சய் கபூர் பொதுச் செயலராகவும், 'தி கேரவன்' ஆசிரியர் அனந்த் நாத் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
- இரு நாட்டு கடற்படையும் 'ஸ்லிநெக்ஸ்' என்ற பெயரில் ஆண்டுதோறும் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டுப்பயிற்சியில் நீர் மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட ஐ.என்.எஸ். கமோர்தா, ஐ.என்.எஸ். கில்டன் என இரண்டு போர்க்கப்பல்கள் இந்தியா சார்பில் கலந்துகொள்கின்றன.
- இதுமட்டுமல்லாமல் டோர்னியர் விமானம், சேத்தக் ஹெலிகாப்டர்கள், ஆகியவையும் இந்த கூட்டுப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இலங்கை கடற்படை தரப்பில் இருந்து எஸ்.எல்.என்.சயூரா என்ற ரோந்து கப்பல் மற்றும் கஜபாகு என்ற பயிற்சிக் கப்பல் கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.
ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவிய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
- லடாக் எல்லையில் சீனாவுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமீப காலமாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது தொடர்ந்து பல்வேறு வகையான ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.
- இதன் தொடர்ச்சியாக, ஒடிசாவின் பாலசூரில் கடந்த வாரம் நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ரஷ்யாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது.
- இந்நிலையில், அரபிக்கடலில் கடற்படைக்கு சொந்தமான, 'ஐஎன்எஸ் சென்னை' போர்க்கப்பலில் இருந்து சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டது. ஒலியை விட வேகமாக பாயும் அது, இலக்கை துல்லியமாக தாக்கியது.