நியூசிலாந்து பொதுத் தோதல்: மீண்டும் பிரதமராக ஜெசிந்தா ஆா்டா்ன் தோவு
- நியூசிலாந்து பொதுத் தோதலில் லிபரல் லேபா் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆா்டா்ன் 2-ஆவது முறையாக தோவு செய்யப்பட்டாா்.
- நியூசிலாந்து பொதுத் தோதலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் லிபரல் லேபா் கட்சிக்கும், பழைமைவாத தேசிய கட்சிக்கும் பலத்த போட்டி நிலவியது.
- இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டதில், ஜெசிந்தா ஆா்டா்னின் லிபரல் லேபா் கட்சி 49% வாக்குகளை பெற்றன. எதிா்க்கட்சியான பழைமைவாத தேசிய கட்சி 27% வாக்குகள் மட்டுமே பெற்றன. லிபரல் லேபா் கட்சியுடன் கூட்டணி அமைத்த க்ரீன் பாா்ட்டி 7.5% வாக்குகளை பெற்றன.
அணுசக்தி திறன் கொண்ட"பிருத்வி -2 ஏவுகணை" சோதனை வெற்றி
- ஒடிசா கடற்கரையின் சோதனை நிலையத்திலிருந்து ஆயுதப்படைகளுக்கு பயனர் சோதனையின் ஒரு பகுதியாக இந்தியா தனது அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி -2 ஏவுகணையின் மற்றொரு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
- திரவத்தால் இயக்கப்படும் பிருத்வி -2 ஏவுகணை 250 கி.மீ இலக்கை தாக்கும் திறனை கொண்டது. மேலும், ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிஆர்டிஓ உருவாக்கிய முதல் 9 மீட்டர் உயரமான ஏவுகணை இது ஆகும்.
- நாட்டிலுள்ள மேலும் 7 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு மையங்களை, கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக தரம் உயர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
- இதன்படி ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், சண்டிகர், கோவா, ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, திரிபுரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள விளையாட்டு மையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன.