- மசோதா 1 - விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020;
- மசோதா 2 - விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020
- மசோதா 3 - அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020.
- இதில் மசோதா 1 செவ்வாய் கிழமை வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட நிலையில், மீதம் உள்ள இரண்டு மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பில் வென்றது.
1. விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020
- இந்த மசோதா மூலம் அதிகார்பூர்வ விவசாய மார்க்கெட்கள், மண்டிகளுக்கு வெளியிலும் விவசாய பொருட்களை விற்க முடியும். குறிப்பிட்ட இடத்தில்தான் விவசாய பொருட்களை வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நிலை போய், இனி எங்கும் வேண்டுமானாலும் இதை வர்த்தகம் செய்யலாம்.
- அதேபோல் வெளியில் இப்படி செய்யப்படும் வர்த்தகத்திற்கு மார்க்கெட் வரி உள்ளிட்ட வரிகளை மாநில அரசுகள் பெற முடியாது. அதேபோல் இப்படி பொருட்களை விற்பனை செய்ய உரிய அனுமதி பெற வேண்டியது இல்லை
2. விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020
- பண்ணை பொருட்களை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும், அதை வாங்குவதையும் ஒழுங்குபடுத்த இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று அரசு கூறியுள்ளது.
- இதன் மூலம் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து அதன் மூலம் தங்கள் பண்ணை பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
3. அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020
- இந்த திருத்த மசோதா மொத்தமாக அத்தியாவசிய பொருட்களின் சந்தையை மாற்ற போகிறது. இதன் மூலம் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்தே நீக்கப்படுகிறது.
- இதனால் இந்த உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இனிமேல் எந்த கட்டுப்பாடும் இருக்காது.