- சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில் அமைக்கப்படும் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில், கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
- தலைவாசலில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
- கால்நடைப் பூங்கா அமைக்க, ஒட்டுமொத்தமாக ரூ.1,022 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பூங்காவுக்காக, தற்போது வரை 1,102 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடம் கட்டும் பணியில், நிர்வாக அலுவலகக் கட்டிடம், கல்வி சார் வளாகங்கள்-8, நூலகம், மாணவ, மாணவியர் விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடைப் பண்ணை வளாகம், முதல்வர் குடியிருப்பு என 20 வகையான கட்டிடங்கள் மொத்தம் 3,72,473 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டு வருகின்றன.
- இப்பணிகள் வரும் ஆண்டு பிப்ரவரியில் முழுமையாக முடிக்கப்பட்டு. பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், கால்நடைப் பூங்காவுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.270 கோடியில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்படும்.
ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில் மருத்துவக் கல்லூரி
June 29, 2020
0
Tags