Type Here to Get Search Results !

ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில் மருத்துவக் கல்லூரி

  • சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில் அமைக்கப்படும் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில், கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். 
  • தலைவாசலில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 
  • கால்நடைப் பூங்கா அமைக்க, ஒட்டுமொத்தமாக ரூ.1,022 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பூங்காவுக்காக, தற்போது வரை 1,102 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடம் கட்டும் பணியில், நிர்வாக அலுவலகக் கட்டிடம், கல்வி சார் வளாகங்கள்-8, நூலகம், மாணவ, மாணவியர் விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடைப் பண்ணை வளாகம், முதல்வர் குடியிருப்பு என 20 வகையான கட்டிடங்கள் மொத்தம் 3,72,473 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டு வருகின்றன.
  • இப்பணிகள் வரும் ஆண்டு பிப்ரவரியில் முழுமையாக முடிக்கப்பட்டு. பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், கால்நடைப் பூங்காவுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.270 கோடியில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel