- கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சர்வதேச லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களை திரும்ப அழைத்து வருவதற்கான இந்தியாவின் மிகப்பெரிய ஆபரேஷன் இதுவாகும்.
- முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அபுதாபியில் இருந்து புறப்பட்டது, அதைத் தொடர்ந்து அதே விமான நிறுவனத்தின் மற்றொரு விமானம் துபாயிலிருந்து கிளம்பியது.
- இதற்கிடையில், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் ஜலாஷ்வாவும் மாலத்தீவை அடைந்துள்ளது. கப்பல் வழியாகவும், இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள்.
- வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் கிட்டத்தட்ட 15,000 இந்தியர்களை, வியாழக்கிழமை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு அழைத்துவர இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 12 நாடுகளில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானங்களில் இவர்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதற்காக, அரசாங்கம் மே 13 வரை 64 விமானங்களை இயக்கும், மூன்று கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தும். "வந்தே பாரத் மிஷன்" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
- 64 விமானங்களில் 15 விமானங்கள் கேரளாவுக்கும், தலா 11 விமானங்கள் தமிழகம் மற்றும் டெல்லிக்கும், தலா 7 மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவிற்கும், மீதமுள்ளவை குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கும் செல்லும்.
வந்தே பாரத் மிஷன் / VANDE BHARAT MISSION
May 08, 2020
0
Tags