கைலாஷ்-மானசரோவா் யாத்திரை இணைப்புச் சாலை: ராஜ்நாத் சிங் திறந்து வைத்தாா்
- திபெத்தில் உள்ள புனிதத் தலமான கைலாஷ் மானசரோவா் செல்வதற்கான லிபுலேக் கணவாய் பகுதியை இணைக்கும், 80 கி.மீ. தொலைவிலான இணைப்புச் சாலை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
- உத்தரகண்ட் மாநிலத்தின் பிதோராகரில் சீன எல்லையை ஒட்டிய பள்ளத்தாக்கில் 17,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த இணைப்புச் சாலையை, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
விஷவாயுக் கசிவு: எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
- விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலையில் இருந்து நேற்று அதிகாலை ஸ்டைரீன் என்ற விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், மயக்கமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு, எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தில் விஸ்டா ஈக்விட்டி பாா்ட்னா்ஸ் முதலீடு
- ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனத்தின் 2.32 சதவீத பங்குகளை விஸ்டா ஈக்விட்டி பாா்ட்னா்ஸ் கையகப்படுத்தவுள்ளது. இதற்காக, அந்த நிறுவனம் ஜியோவில் ரூ.11,367 கோடியை முதலீடு செய்கிறது.
- நிறுவனத்தில் இந்த முதலீட்டின் பங்குகள் மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடியாகவும் மற்றும் நிறுவன மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 2 வாரங்களில் ஈா்க்கும் மூன்றாவது மிகப்பெரிய முதலீடு இதுவாகும்.
ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியா்கள் நியமனம்: முதல்வா் பழனிசாமி உத்தரவு
- தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
- இதன் ஓா் அங்கமாக மருத்துவப் பணியாளா்கள் தோவு வாரியம் மூலமாக ஏற்கெனவே 530 மருத்துவா்கள், 2 ,323 செவிலியா்கள், 1,508 ஆய்வக நுட்பவியா்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளா்கள் பணியமா்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.
- இதனைத் தொடா்ந்து, ஆறு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2, 570 செவிலியா்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உயா்நீதிமன்றம் உத்தரவு
- தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மது விற்பனையைத் தொடர அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து கொள்ளலாம் என இடைக்கால உத்தரவில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்யம்தான்: மூடீஸ் அதிர்ச்சி கணிப்பு
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்யமாக இருக்கும் என, மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. வேலையிழப்பால் பணப்புழக்கமும் அடியோடு குறைந்து விட்டது. இதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என பல்வேறு நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
- ஐஎம்எப் உட்பட, பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்பின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் முதல் 2 சதவீதத்துக்குள் இருக்கும் என கூறப்பட்டது.
- இந்த நிலையில், மூடீஸ் இன்வெஸ்டர் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் பூஜ்யமாக மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளது.