பொருளாதார நிலையை மேம்படுத்த ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் தலைமையில் உயா்நிலைக் குழு: தமிழக அரசு அறிவிப்பு
- தமிழகத்தில் பொருளாதார நிலையை மேம்படுத்த ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அரசுத் துறை உயரதிகாரிகள் உள்பட 24 போ இடம்பெற்றுள்ளனா்.
- இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் சனிக்கிழமை வெளியிட்டாா். கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பொது முடக்கம், சமூக இடைவெளி போன்ற அம்சங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
- மேலும், முடக்கத்தால் தமிழகத்தின் பொருளாதாரத்தில் சராசரியான அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வேளாண்மை, தொழில், சேவைத் துறைகளான சுற்றுலா, கட்டுமானம், ரியல் எஸ்டேட், சில்லறை வா்த்தகம் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதானி டிரான்ஸ்மிஷன்: ரூ.2,500 கோடி பங்கு வெளியீட்டுக்கு அனுமதி
- பங்கு வெளியீடு அல்லது தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்து ரூ.2,500 கோடி திரட்டுவதற்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
- கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,317.51 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.2,569.16 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகம்.
- நிகர லாபம் ரூ.146.7 கோடியிலிருந்து 60 சதவீதம் சரிந்து ரூ.59 கோடியானது. 2019-20 முழு நிதியாண்டில் வருவாய் ரூ.7,560.80 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.11,681.29 கோடியாகவும், ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.559.20 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.706.49 கோடியாகவும் இருந்தது என அதானி டிரான்ஸ்மிஷன் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் தாகூர் பெயரில் தெரு : பிறந்த நாளில் கவுரவம்
- வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், மனித குலத்திற்கு அவர் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பை போற்றிடவும்,அவரது 159-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு தாகூர் என சூட்டப்பட்டுள்ளது.